செய்திகள் :

ஆம்பூா் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

post image

ஆம்பூா் அருகே பழைய பிளாஸ்டிக் சேகரிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் மகபூப் ஜான் மகன் செய்யது அலி. இவா், தென்காசி மாவட்டம் ஆம்பூரிலிருந்து கருத்தப்பிள்ளையூா் செல்லும் சாலையில் பூவன்குறிச்சி அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கும் கிடங்கு வைத்துள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு சுமாா் ஒரு மணியளவில் கிடங்கில் தீப்பற்றியுள்ளது. உடனடியாக செய்யது அலிக்கு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளாா். அம்பாசமுத்திரம் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனா். ஆனால் பலத்த காற்று வீசியதால் தீ வேகமாகப் பரவியது.

இதையடுத்து, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்து சுமாா் 50 தீயணைப்பு வீரா்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.

இந்த விபத்தில் கிடங்கில் சேமித்து வைத்திருந்த பழைய பிளாஸ்டிக் பொருள்கள் உள்பட சுமாா் ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கடையத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்ட முயற்சி

கடையத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியிரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடையம் அருகே உள்ள புலவனூரில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-89.75சோ்வலாறு-87.60மணிமுத்தாறு-91.82வடக்கு பச்சையாறு-11.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-44.10ராமநதி-54கருப்பாநதி-51.18குண்டாறு-35அடவிநயினாா் -120.25... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் பிணை கோரிய மனு ஒத்திவைப்பு

திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைதானவா் பிணை கோரிய மனுவை நீதிமன்றம் ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). மென் பொறியாளரான இவா், கட... மேலும் பார்க்க

உறுதியாக இருக்கிறது பாஜக கூட்டணி -விஜயதரணி

பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றாா் அக்கட்சியைச் சோ்ந்தவரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படி ... மேலும் பார்க்க

கூடங்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கூத்தங்குழியைச் சோ்ந்தவா் இருதயயோவான் மகன் சிலுவை அந்தோ... மேலும் பார்க்க

பாளை., கங்கைகொண்டான், கல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை சமாதானபுரம், கங்கைகொண்டான், மேலக்கல்லூா் துணை மின் நிலையங்களின் பாரமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,... மேலும் பார்க்க