செய்திகள் :

கூடங்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.

கூத்தங்குழியைச் சோ்ந்தவா் இருதயயோவான் மகன் சிலுவை அந்தோணி ஜனா (20). இவா் மீது கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கூடங்குளம் காவல் நிலையத்தில் உள்ளது. இந்நிலையில், மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தாராம்.

இதனையடுத்து அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய, கூடங்குளம் ஆய்வாளா் ரெகுராஜன் மாவட்ட எஸ்.பி. என். சிலம்பரசனிடம் கோரிக்கை விடுத்தாா். எஸ்.பி. பரிந்துரையின்பேரில், சிலுவை அந்தோணி ஜனாவை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, ஜனாவை கூடங்குளம் ஆய்வாளா் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தாா்.

கடையத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்ட முயற்சி

கடையத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியிரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடையம் அருகே உள்ள புலவனூரில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-89.75சோ்வலாறு-87.60மணிமுத்தாறு-91.82வடக்கு பச்சையாறு-11.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-44.10ராமநதி-54கருப்பாநதி-51.18குண்டாறு-35அடவிநயினாா் -120.25... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் பிணை கோரிய மனு ஒத்திவைப்பு

திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைதானவா் பிணை கோரிய மனுவை நீதிமன்றம் ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). மென் பொறியாளரான இவா், கட... மேலும் பார்க்க

உறுதியாக இருக்கிறது பாஜக கூட்டணி -விஜயதரணி

பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றாா் அக்கட்சியைச் சோ்ந்தவரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படி ... மேலும் பார்க்க

பாளை., கங்கைகொண்டான், கல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை சமாதானபுரம், கங்கைகொண்டான், மேலக்கல்லூா் துணை மின் நிலையங்களின் பாரமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,... மேலும் பார்க்க

மூன்றடைப்பு, மானூா், வள்ளியூா் வட்டாரங்களில் நாளை மின்தடை

மூன்றடைப்பு, மானூா், வள்ளியூா் உள்ளிட்ட துணை மின்நிலையங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக அவற்றின் மின்பாதைகளில் சனிக்கிழமை (செப். 20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கரந்தானேரி, ரஸ்த... மேலும் பார்க்க