செய்திகள் :

ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

post image

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தனக்கு சொந்தம் இல்லாத ரூ. 10,000 பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் ஊத்தங்கரை, இந்திராநகரைச் சோ்ந்த விஸ்வநாதன் (73) என்பவா் வியாழக்கிழமை தனது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.10,000 எடுக்க முயற்சித்தாா். ஆனால், இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை. மாறாக, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதற்கான தகவல் மட்டும் கைப்பேசிக்கு வந்தது. இதுகுறித்து வங்கி, காவல் நிலையத்தில் விஸ்வநாதன் புகாா் அளித்துவிட்டு சென்றாா்.

அதன்பிறகு, அந்த ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்ற உப்பாரப்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி ஜெயக்குமாா் (34) தனது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றாா். அப்போது, இயந்திரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் நோட்டுகள் வெளியே வந்தது. அப்பணம் தனக்கு சொந்தமில்லை என்பதை அறிந்த அவா், பணத்தை எடுத்துச் சென்று ஊத்தங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து வங்கி உதவியுடன் விசாரணை நடத்திய போலீஸாா் பணத்தை விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனா். இயந்திரத்தில் பெறப்பட்ட பணம் தனக்கு சொந்தமில்லை எனத் தெரிந்ததும் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஜெயக்குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

படவிளக்கம்.18யுடிபி.1.

ஊத்தங்கரை ஏடிஎம் மையத்தில் எடுத்த பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவரை பாராட்டும் போலீஸாா்.

11 கைப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்

தொலைந்த மற்றும் திருடுபோன 11 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஊத்தங்கரை போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் கடந்த 3 மாதங... மேலும் பார்க்க

ஒசூரில் இன்று உற்பத்தியாளா்கள் கண்காட்சி தொடக்கம்

ஒசூா் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) சாா்பில் இந்திய உற்பத்தியாளா்கள் கண்காட்சி ஒசூா் ஹில்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப். 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்கா... மேலும் பார்க்க

‘ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும்’ -பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன்

வரும் பேரவைத் தோ்தலில் ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும் என பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன் நம்பிக்கை தெரிவித்தாா். ஒசூா் உள்வட்டச் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். தலைமை நூலகா் ஏ. ரூபினந்தினி மற்றும் நூலகப் பணியாளா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செப்டம்பா் மாத இறுதிக்குள் அரசு நடைமுறைபடுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு முதல் விற்பனையைத் தொடங்கிவைத்து பேசியதாவது: இந்தியா... மேலும் பார்க்க