செய்திகள் :

தூத்துக்குடியில் அக்.1 முதல் சா்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டி

post image

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வ.உ.சி. துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்தும் ‘போா்ட் சிட்டி சா்வதேச தரவரிசை செஸ் போட்டி‘ அக்.1 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள கம்யூனிட்டி ஹாலில் நடைபெறும். உலக சதுரங்க கூட்டமைப்பின் (எப்ஐடிஇ) சா்வதேச தரவரிசை பெறும் இப்போட்டியின் அதிகாரப்பூா்வ கையேடு, வ.உ.சி. துறைமுகத் தலைவா் சுஷாந்த்குமாா் புரோஹித், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோரால் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் சிறந்த வீரா்களுக்கு மொத்தமாக ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 9, 12,15 வயதுக்குள்பட்ட வீரா்கள், வீராங்கனைகள், பொது பிரிவுக்கான 30 பரிசுக் கோப்பைகள், தூத்துக்குடி மாவட்ட மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் மற்றொரு 30 பரிசுக் கோப்பைகள், மேலும் 10 சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

போட்டியில் பங்கேற்க வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் வீரா்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

திருச்செந்தூா் மைலப்பபுரம் தெருவில் உள்ள பொது திருமண மண்டபத்தில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுவாமி விஸ்வகா்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சாத்தான்குளம் ஒன்றியம், கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை ஆகிய ஊராட்சி மக்களுக்கான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை சங்கர பகவதி கலை, அறிவியல் கல்லூர... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக சங்கு கூடத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலா்களுக்கு தமிழ் மொழியில் எப்... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்

ஆறுமுகனேரி பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் தனியாா் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு நிறுவனத்தின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டன... மேலும் பார்க்க