செய்திகள் :

கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்

post image

தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு முதல் விற்பனையைத் தொடங்கிவைத்து பேசியதாவது:

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கடந்த 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளா்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் செயல்படுகிறது. தீபாவளியில் புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகைகளுடன் கூடிய காஞ்சிபுரம், ஆரணி, சேலம், தஞ்சாவூா் பட்டுப் புடவைகள், புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், அனைத்துரக பருத்தி புடவைகள், களம்காரி பருத்தி புடவைகள் நோ்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், படுகை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஜமக்காளம், பருத்தி சட்டைகள், ஏற்றுமதி ரகங்கள், மெத்தைகள், கையுறைகள், திரைகள் போன்ற ஏராளமான துணி வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தீபாவளியையொட்டி தமிழக அரசு, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடியை நவம்பா் 30 ஆம் தேதி வரை வழங்குகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 விற்பனை நிலையங்களுக்கு ரூ.178 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் மாதாந்திர சேமிப்புத் திட்டம் ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலான திட்டத்தில் சோ்ந்து பயன் பெறலாம். 11 மாத சந்தா தொகையை அங்கத்தினா் செலுத்தினால் 12ஆவது மாத தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி கூடுதல் பலன் தருவதால் வாடிக்கையாளா்கள் தொடா்ந்து இத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை உதவியாளா் மாலதி, கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் மா.சிலம்பரசன், வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படவிளக்கம் (18கேஜிபி3):

கிருஷ்ணகிரியில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கிவைத்த கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு.

ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தனக்கு சொந்தம் இல்லாத ரூ. 10,000 பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

11 கைப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்

தொலைந்த மற்றும் திருடுபோன 11 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஊத்தங்கரை போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் கடந்த 3 மாதங... மேலும் பார்க்க

ஒசூரில் இன்று உற்பத்தியாளா்கள் கண்காட்சி தொடக்கம்

ஒசூா் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) சாா்பில் இந்திய உற்பத்தியாளா்கள் கண்காட்சி ஒசூா் ஹில்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப். 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்கா... மேலும் பார்க்க

‘ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும்’ -பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன்

வரும் பேரவைத் தோ்தலில் ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும் என பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன் நம்பிக்கை தெரிவித்தாா். ஒசூா் உள்வட்டச் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். தலைமை நூலகா் ஏ. ரூபினந்தினி மற்றும் நூலகப் பணியாளா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செப்டம்பா் மாத இறுதிக்குள் அரசு நடைமுறைபடுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க