செய்திகள் :

’ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் வீட்டுக்குள் அத்துமீறி இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய்யின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவருக்கு மத்திய அரசு சார்பில் ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை அடுத்த நீலாங்கரையில் உள்ள விஜய்யின் மொட்டை மாடிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனைத்து பாதுகாப்புகளையும் மீறி இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார்.

நேற்று மாலை விஜய் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக மொட்டை மாடிக்கு சென்றபோது அந்த இளைஞரை பார்த்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக, அவரை நீலாங்கரை காவல்துறையினரிடம் விஜய் வீட்டின் காவலர்கள் ஒப்படைத்தனர்.

அந்த இளைஞர் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக மனநலன் பாதிக்கப்பட்டுள்ள அவர், சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் மனநலன் மருத்துவமனையில் அந்த இளைஞரை காவல்துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், மத்திய ஆயுதப் படையின் ’ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய்யின் வீட்டு மாடிக்குச் சென்ற இளைஞர், நீண்ட நேரம் அமர்ந்திருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

A young man has trespassed into the house of Tamil Nadu Vetri Kalagam leader and actor Vijay.

இதையும் படிக்க : அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 3,126 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவல... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.செப். 19 தமிழகத்தில் ஒருசில இடங்களில... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கரும்பு வெட்டும் அண்ணன், தம்பி பலி!

விழுப்புரத்தில் கரும்பு வெட்டச் சென்ற சகோதரர்கள் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொங்கராயனூர் கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் தீவிர சோதனையில் ஈட... மேலும் பார்க்க

நாகை: நாளை விஜய் பரப்புரையில் இடம் மாற்றம்!

நாகை மாவட்டம், புத்தூர் அண்ணா சிலை அருகே பரப்புரை மேற்கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதியளித்தது.அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் ஈ... மேலும் பார்க்க

வேலுநாச்சியார் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.சுதந்திரப் போராட்ட வீராங்கனையாகத் திகழ்ந்த வேலுநாச்சியாரின் வீரத்த... மேலும் பார்க்க