செய்திகள் :

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவு

post image

ரஷியாவின் கம்சட்கா கிழக்கு கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷியாவின் கம்சட்கா பிராந்தியத்தில் இருந்து 128 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் வெள்ளிக்கிழமை காலை 12.28 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இவை ஒவ்வொன்றும் 5.8 ரிக்டர் அளவிலானவை என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கடற்கரையில் 30 முதல் 62 சென்டிமீட்டர் உயர ராட்சத அலை உருவாகக்கூடும் என்பதால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது உயிர் சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

1200-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவு

ரஷியாவின் கம்சட்கா இந்த ஆண்டின் நில அதிர்வு நடவடிக்கைகளின் மையமாக உள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவிலானவை (ரிக்டர் அளவில் 2.0 முதல் 4.0 வரை), ஆனால் ரிக்டர் அளவில் 4.0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த பிராந்தியத்தில் 7.0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான 4 பெரிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

கம்சட்காவில் 2025 ஜூலை 30 இல் மிகவும் பேரழிவு தரக்கூடிய நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவாகியிருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான நிலநடுக்கங்களில் மிகப்பெரிய அதிர்வாகும். இது பல நாடுகளை பாதித்தது. இந்த நிலநடுக்கம் கடல் பகுதியில் ஏற்பட்டதால் அதிக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதன் பின்னர், ஆகஸ்ட் 3 ஆம் தேதி, கம்சட்காவின் குரில் தீவுகளுக்கு அருகே 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையில், செப்டம்பர் 13 ஆம் தேதி, கம்சட்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்குப் பிறகு இங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 70% குறைக்க ஆஸ்திரேலியா முடிவு

A strong earthquake struck Russia's far eastern Kamchatka region, the regional governor said on Friday, prompting a series of tsunami warnings in the region

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்க!: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்... மேலும் பார்க்க

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: தரைப்பாலும் மூழ்கியது!

உத்திரகாவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒடுக்கத்தூரில் இருந்து நேமந்தபுரம் இடையே செல்லக்கூடிய ஆற்று தரைபாலம் மூழ்கியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வரும் நிலையில், வேல... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 17 அறிமுகம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் இளைஞர்கள்!

ஆப்பிள் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் 17 மாடல் போனைப் பெறுவதற்கு தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் தனது புதி... மேலும் பார்க்க

சர்வாதிகார திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக பிரமுகர் செய்தியாளர்களைத் தரக்குறைவாக வசைபாடி தாக்க முயன்ற சம்பவம் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்ட... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்

!சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81.840-க்கு விற்பனையாகிறதுது.சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன்... மேலும் பார்க்க

நடிகா் ரோபோ சங்கா் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை: நடிகா் ரோபோ சங்கா் (46) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவ... மேலும் பார்க்க