செய்திகள் :

செப். 21 சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாதது ஏன்?

post image

செப்டம்பர் 21ஆம் தேதி நிகழும் பகுதி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. பூமியின் தெற்கு கோளப் பகுதியில் மட்டுமே காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வந்து மறைப்பதே சூரிய கிரகணம். இந்த கிரகணத்தின்போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்காது என்பதால் பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது.

ஏன் பகுதி சூரிய கிரகணம் நிகழ்கிறது?

சூரியன், நிலா, பூமி என அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமையவில்லை, எனவே, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா குறுக்கிடும்போது, சூரியனின் 85 சதவீதத்தை மட்டுமே மறைப்பதால் பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இந்த கிரகணமானது, இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி கிரகணமாகும். இந்த கிரகணத்தின்போது 85 சதவீத சூரியன் நிலவால் மறைக்கப்படும். அதனால்தான் இது பகுதி சூரிய கிரகணமாகிறது. இந்திய நேரத்தைப் பொறுத்தவரை இது செப். 21ஆம் தேதி இரவு 10.59 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 1.11 மணிக்கு முழுமையடைந்து செப்.22ஆம் தேதி அதிகாலை 3.23மணிக்கு நிறைவடைகிறது.

சூரிய கிரகணம் நிகழ்வது இந்திய நேரப்படி நள்ளிரவு என்பதால், சூரியன் வானிலிருந்து மறைந்துவிடும், எனவே, இந்திய மக்களால் இந்த வான அதிசயத்தைக் காண இயலாமல் போகிறது. எனவே, பூமியின் தெற்கு கோளப் பகுதி மக்களால் மட்டுமே இதனைக் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில், பசுபிக் தீவுகள், அன்டார்டிகா, நியூ ஸிலாந்து, கிழக்கு ஆஸ்திரேலிய மக்கள் மட்டுமே இதனைக் காண முடியும். ஆனால், உலகின் எங்கிருந்தும், இதனை நேரலையாகக் காண்பதற்கு பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தைக் காண அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்றால் அது ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஸிலாந்து மக்கள்தான். இந்த சூரிக கிரகணத்தின்போது, வானம் ஓரளவு இருளில் மூழ்குமாம். இந்தியா, ஐரோப்பா நாடுகள், ஆப்ரிக்கா, அமெரிக்கா என மற்ற நாடுகள் எதுவும் இதனைக் காண இயலாது.

அடுத்த சூரிய கிரகணம் எப்போது?

இந்தியாவில் அடுத்த சூரிய கிரகணத்தைக் காண வேண்டும் என்றால் அது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதிதான். அன்றைய தினமும், இந்தியாவில் பகுதி சூரிய கிரகணம்தான் தெரியும். சூரிய கிரகணம் தொடங்குவது ஆகஸ்ட் 2ஆம் தேதி பிற்பகலில்தான். எனவே, சூரியன் மறைவதற்குள் நாம் பகுதி சூரிய கிரகணத்தைத்தான் காண முடியும்.

The partial solar eclipse that will occur on September 21st will not be visible in India. It has been reported that it will be visible only in the southern hemisphere of the Earth.

இதையும் படிக்க...டெக்கான் குயின் டூ வந்தே பாரத்! ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் பணி ஓய்வு!

பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா

பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போன்று உணர்ந்ததாக காங்கிரஸ் அயலக அணித் தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவு கொள்கை, வாக்குத் திருட்டு, அதானி குழும விவ... மேலும் பார்க்க

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்!

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலம், அணு ஆயுத உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க முடியும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார். ஜார்க்கண்டில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் பதிவு

அதிகாலை 4 மணிக்கு வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்... மேலும் பார்க்க

டெக்கான் குயின் டூ வந்தே பாரத்! ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் பணி ஓய்வு!

சுரேகா யாதவ், வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்தான் ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர். செப். 30ஆம் தேதி தனது தொழில் பயணத்தை இவர் நிறைவு செய்யவிருக்கிறார்.வந்தே பாரத் ... மேலும் பார்க்க

லலித் மோடியின் சகோதரர் பாலியல் வழக்கில் கைது!

நாட்டில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு எதிராக பெறப்பட்ட பாலியல் வன்கொடுமை புகாரைத் தொடர்ந்து, தில்லி விமான நிலையத்த... மேலும் பார்க்க