செய்திகள் :

டெக்கான் குயின் டூ வந்தே பாரத்! ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் பணி ஓய்வு!

post image

சுரேகா யாதவ், வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்தான் ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர். செப். 30ஆம் தேதி தனது தொழில் பயணத்தை இவர் நிறைவு செய்யவிருக்கிறார்.

வந்தே பாரத் முதல் டெக்கான் குயின் வரை பல ரயில்களை இயக்கி சாதனை படைத்த இவர், தொழில்மீதான ஆர்வம், உறுதிப்பாடு, பாலின வேறுபாடு, தொழிலில் பெண்களுக்கான சவால்கள் என பலவற்றை உடைத்தெறிந்து, எண்ணற்றக் கனவுகளுடன் இருக்கும் மகளிருக்கு எந்தத் தடைகளையும் உடைத்தெறியும் வல்லமைகொண்ட நல் வழிகாட்டியாக மாறியிருக்கிறார்.

1988ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் சுரேகா இணைந்தார். 1989ஆம் ஆண்டு உதவி ரயில் ஓட்டுநராக பணியாற்றியவர், படிப்படியாக முன்னேறி, 1996ஆம் ஆண்டு சரக்கு ரயில்களை இயக்கினார். பத்தாண்டுகளில் டெக்கான் குயின் ரயிலை இயக்கினார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி மற்றொரு சாதனையை அவர் படைத்தார். சோலாபூர் - மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துக்கு இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கியதன் மூலம், அதிவேக ரயில் ஓட்டுநரான பெண் என்ற சாதனையையும் பெற்றார். அப்போது, அவருக்கு மிகச் சிறப்பான பாராட்டுகள் குவிந்தன. நாடு முழுவதும் இந்திய ரயில்வேக்கும், இந்திய மகளிருக்கும் பெருமை சேர்த்த தருணமாகவும் அது மாறியது.

மகாராஷ்டிர மாநிலம் சதாராவைச் சேர்ந்தவர் சுரேகா. விவசாயக் குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து எலக்ட்ரிக்கல் பொறியியல் படித்தார். இவரது உத்வேகம், ஆண்கள் கோலோச்சிய துறையில் சாதிப்பது என்ற இலக்கு போன்றவை இந்த சாதனைகளுக்குக் காரணமாக அமைந்தது என்றே கூறலாம்.

மத்திய ரயில்வே, சுரேகா யாதவ் பற்றி தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அதில், சுரேகா யாதவ், ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர், செப்டம்பர் 30ஆம் தேதி, தன்னுடைய 36 ஆண்டு கால பணியிலிருந்து ஓய்வுபெறவிருக்கிறார்.

மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், தடைகளை உடைத்தெறிந்து, எண்ணற்ற பெண்களுக்கு உத்வேகமாக இருப்பவர், எல்லா தடைகளையும் தாண்டி எந்தக் கனவையும் பெண்கள் அடைய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இந்திய ரயில்வேயில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் முறைக்கு எப்போதும் இவரது வாழ்க்கைப் பயணம் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போது 1500 பெண் ரயில் ஓட்டுநர்கள் உள்ளனர். இதற்கு துவக்கப் புள்ளியாக இருந்தவர் சுரேகா யாதவ்.

Surekha Yadav has made history 36 years ago as the first woman train driver in Asia. She will complete her career on September 30.

இதையும் படிக்க... செப்.21 சூரிய கிரகணம்: சூரிய உதயமே வான அதிசயம் காட்டும்!

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் பதிவு

அதிகாலை 4 மணிக்கு வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்... மேலும் பார்க்க

செப். 21 சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாதது ஏன்?

செப்டம்பர் 21ஆம் தேதி நிகழும் பகுதி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. பூமியின் தெற்கு கோளப் பகுதியில் மட்டுமே காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ... மேலும் பார்க்க

லலித் மோடியின் சகோதரர் பாலியல் வழக்கில் கைது!

நாட்டில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு எதிராக பெறப்பட்ட பாலியல் வன்கொடுமை புகாரைத் தொடர்ந்து, தில்லி விமான நிலையத்த... மேலும் பார்க்க

செப். 22 முதல் ஜிஎஸ்டி குறைப்புகளின் பலன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்: வேளாண் அமைச்சர்!

மத்திய ஜிஎஸ்டி குறைப்புகளின் பலன்கள் செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை டிராக்டர் தயாரிப்பாளர்களை சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்துகிறார்.விவசாய உபகரண உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளுடனான ச... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற வாசலில் வடிகாலை கைகளால் சுத்தம்செய்த அவலம்! பொதுப்பணித் துறைக்கு அபராதம்!

உச்ச நீதிமன்றத்தின் வெளியே வாயில் அருகே இருந்த வடிகால்களை கையால் சுத்தம் செய்வதாகக் கூறி, எழுந்த புகார்களால் சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உ... மேலும் பார்க்க