செய்திகள் :

உச்சநீதிமன்ற வாசலில் வடிகாலை கைகளால் சுத்தம்செய்த அவலம்! பொதுப்பணித் துறைக்கு அபராதம்!

post image

உச்ச நீதிமன்றத்தின் வெளியே வாயில் அருகே இருந்த வடிகால்களை கையால் சுத்தம் செய்வதாகக் கூறி, எழுந்த புகார்களால் சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் எஃப் வாயில் (Gate F) வெளியே உள்ள வடிகால்களை, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி, வெறும் கைகளால் சுத்தம்செய்ய சிறுவன் உள்பட தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது.

விடியோ சான்றுகளுடன் அளிக்கப்பட்ட புகார், நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறியதாக எச்சரித்ததுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்தச் சம்பவத்தின் மூலம் நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்படுவது தெரிவதாக மூத்த வழக்குரைஞர் கே. பரமேஸ்வர் கூறினார்.

வடிகாலை கைகளால் சுத்தம்செய்ய சிறுவன் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கோரியதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், காவல்துறையோ பொதுப் பணித் துறையோ உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, இது சட்ட மீறல் மட்டுமல்ல; அரசியலமைப்பை மீறுவதாகும் என்றும் கூறினார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரூ.5 லட்சம் அபராதத்தை 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிக்க:ரூ.2,796 கோடி மோசடி வழக்கு! அனில் அம்பானி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை!

Supreme Court Imposes Rs 5 Lakh Cost On Delhi PWD For Manual Sewer Cleaning Outside SC's Gate

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் பதிவு

அதிகாலை 4 மணிக்கு வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்... மேலும் பார்க்க

செப். 21 சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாதது ஏன்?

செப்டம்பர் 21ஆம் தேதி நிகழும் பகுதி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. பூமியின் தெற்கு கோளப் பகுதியில் மட்டுமே காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ... மேலும் பார்க்க

டெக்கான் குயின் டூ வந்தே பாரத்! ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் பணி ஓய்வு!

சுரேகா யாதவ், வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்தான் ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர். செப். 30ஆம் தேதி தனது தொழில் பயணத்தை இவர் நிறைவு செய்யவிருக்கிறார்.வந்தே பாரத் ... மேலும் பார்க்க

லலித் மோடியின் சகோதரர் பாலியல் வழக்கில் கைது!

நாட்டில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு எதிராக பெறப்பட்ட பாலியல் வன்கொடுமை புகாரைத் தொடர்ந்து, தில்லி விமான நிலையத்த... மேலும் பார்க்க

செப். 22 முதல் ஜிஎஸ்டி குறைப்புகளின் பலன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்: வேளாண் அமைச்சர்!

மத்திய ஜிஎஸ்டி குறைப்புகளின் பலன்கள் செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை டிராக்டர் தயாரிப்பாளர்களை சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்துகிறார்.விவசாய உபகரண உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளுடனான ச... மேலும் பார்க்க