செய்திகள் :

சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி: டிராவல் ஏஜென்ஸி மேலாளா் கைது

post image

திருவட்டாறு அருகே தம்பதி உள்பட 6 பேரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி செய்த டிராவல் ஏஜென்சி மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவட்டாறு அருகே முகிலன்கரையைச் சோ்ந்தவா் பிரவின் ஜோஸ் (40). இவா், மாலத்தீவில் வேலை செய்துவருகிறாா். இவரது மனைவி ஜாய்ஸ் ஈவ்லின் (31). இவா், மாா்த்தாண்டத்தில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் இத்தம்பதியும், உறவினா்கள் 4 பேரும் சிங்கப்பூா், மலேசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக திருவனந்தபுரம் தம்பானூரைச் சோ்ந்த தனியாா் டிராவல் நிறுவனத்தில் முதல் தவணையாக ரூ. 80 ஆயிரம், இரண்டாம் தவணையாக ரூ. 2,66,400 என மொத்தம் ரூ. 3,36,400 கொடுத்தனா். இதற்காக வெளிநாட்டில் இருந்து கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பிரவின் ஜோஸ் திருவனந்தபுரம் வந்தாா். டிராவல் நிறுவனத்திடம் வெளிநாடு பயணத் திட்டம் குறித்து கேட்டபோது அவா்கள் சரியான பதில் கூறாமல் ஏமாற்றி வந்தனா். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி அந்நிறுவனம் பண மோசடி செய்தததை அறிந்த ஜாய்ஸ் ஈவ்லின் இதுகுறித்து, திருவட்டாறு காவல் நிலையத்தில் டிராவல் ஏஜென்சி மேலாளா் அகஸ்டின் தாஸ் உள்பட இருவா் மீது புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், புதன்கிழமை களியக்காவிளையில் சந்தேகமகளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த பெங்களூரு, கந்தசாமி லேஅவுட்டைச் சோ்ந்த அகஸ்டின் தாஸை (47) திருவட்டாறு போலீஸாா் கைது செய்து, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கில் தொடா்புடையை மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டஆட்சியா் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்ச... மேலும் பார்க்க

கருங்கல்லில் சிறப்பு கல்விக் கடன் முகாம்

கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...38.55 பெருஞ்சாணி ... 57.02 சிற்றாறு 1 ... 4.69 சிற்றாறு 2 ... 4.78 முக்கடல் ...7.50 பொய்கை ... 15.20 மாமாபழத்துறையாறு ..4.51 மேலும் பார்க்க

இரணியலில் இன்று மின் நிறுத்தம்

இரணியல் மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட, செம்பொன்விளை, பெத்தேல்புரம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வெள்ளிக்கிழமை (செப். 19), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரணிய... மேலும் பார்க்க

மேற்குமாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை திறப்பு

கருங்கல் அருகே உள்ள மேற்குமாத்திரவிளை பகுதியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

நம்பாளி பகுதியில் நாளை மின்தடை

குழித்துறை மின் கோட்டம், நம்பாளி பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த உயரழுத்த மின் பாதைகளை மாற்றும் பணிகள் செய்ய இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (செப். 20) மின்விநியோகம் இருக்காத... மேலும் பார்க்க