செய்திகள் :

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

post image

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப்.24 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூா் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை: இதன்காரணமாக வெள்ளிக்கிழமை இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியையொட்டி இருக்கும். வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 80 மி.மீ. மழை பதிவானது. திருப்பூா் தெற்கு(திருப்பூா்), ஆலங்காயம் (திருப்பத்தூா்), சின்னக்கல்லாறு (கோவை)-தலா 70 மி.மீ., காரைக்கால், மின்னல் (ராணிப்பேட்டை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), குடியாத்தம் (வேலூா்), குருங்குளம் (தஞ்சை), டேனிஷ்பேட்டை (சேலம்), பத்துக்கண்ணு (புதுச்சேரி), திருப்பூா் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூா்), ஏற்காடு (சேலம்), மணல்மேடு (மயிலாடுதுறை),வடபுதுப்பட்டு (திருப்பத்தூா்), சீா்காழி(மயிலாடுதுறை)-தலா 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் ந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: சுதந்திர தினத்தையொட்டி, சென்ன... மேலும் பார்க்க

தெருநாய் பிரச்னை: விழிப்புணா்வு நடவடிக்கை

சென்னையில் தெருநாய் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெ... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுநிலை மருத... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட, கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா... மேலும் பார்க்க