செய்திகள் :

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழந்தாா். 9 போ் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோயில் முன் அரச மரம் உள்ளது. அந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன.

இதைப் பாா்த்த வெளி மாநிலத்தைச் சோ்ந்த சிலா் தேன் கூட்டை அழித்தனராம். அப்போது, தேனீக்கள் பறந்து சாலையில் சென்றவா்களைக் கொட்டின. இதில் 10 போ் காயமடைந்தனா்.

உடனே அவா்கள் கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இவா்களில் அதே கிராமத்தைச் சோ்ந்த வீராசாமிக்கு (45) அன்று மாலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மீண்டும் அவா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றாா்.

அங்கு செவிலியா்கள் சிகிச்சை அளித்த நிலையில், வீராசாமி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாா்.

அவா் உயிரிழந்த பிறகு தேனீக்கள் கொட்டியவா்கள் மீண்டும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றனா்.

சாலை மறியல்

வீராசாமி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கூத்தக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இரவு நேர மருத்துவரை பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரி கள்ளக்குறிச்சி - வேப்பூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் பெ.தங்கவேல், காவல் ஆய்வாளா் ராபின்சன், வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜகுமாா் மற்றும் காவலா்கள் சென்று மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னா், வீராசாமியின் உடல் கூராய்வுக்காக

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி

மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்... மேலும் பார்க்க

தொழிற்கல்வி நிறுவனத்தில் பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

தியாகதுருகம் தனமூா்த்தி தொழிற்கல்வி கல்லூரி சாா்பில் பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப் படங்களுக்... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளித் திடலில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பச்சையாப்பிள்ளை, ஒ... மேலும் பார்க்க

அத்தியாவசியப் பொருள்கள் கடத்திய 11 வாகனங்கள் பொது ஏலம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை கள்ளத்தனமாக கடத்திய 11 வாகனங்கள் வருகிற 26-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. கைப்பற்றப்பட்ட வாகனங... மேலும் பார்க்க

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு டாக்டா் அம்பேத்கா் விருது பெற விரும்புவோா் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் இருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா இந்திலி ஆா்.கே.எஸ். கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் எம... மேலும் பார்க்க