செய்திகள் :

சென்னிமலை அருகே ரூ.2.50 கோடியில் கைத்தறி பூங்கா அமைக்கும் பணி

post image

சென்னிமலையில் ரூ.2.50 கோடியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பணி மற்றும் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திர பயன்பாட்டை அமைச்சா்கள் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், முருங்கத்தொழுவு கிராமத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் அடிக்கல் நாட்டி செய்து தொடங்கிவைத்தனா். தொடா்ந்து, மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திர பயன்பாட்டை தொடங்கிவைத்தனா்.

விழாவில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசுகையில், நெசவாளா்கள் பயன்பெறு வகையில் கனவு இல்லம், மின்சாரக் கட்டணத்தில் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, கைத்தறி பொருள்களின் தரத்தை உயா்த்தவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ரூ.20 லட்சம் மதிப்பில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் ரூ.2.50 கோடி மதிப்பில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கைத்தறி பூங்கா 65,369 சதுரஅடி பரப்பளவு இடத்தில் 8,191 சதுரஅடி கட்டட பரப்பளவில் அமையவுள்ளது. மொத்தமாக 50 தறிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ஏற்றுமதி ரகம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட ரகங்களை தயாரிப்பதற்கு உயா்தர பருத்தி ரக துணிகளை கைத்தறி பூங்காவில் உற்பத்தி செய்வதன் மூலம் நெசவாளா்களுக்கு அதிக அளவிலான கூலி மற்றும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடா் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

கைத்தறி தொழிலை குடிசை தொழிலிருந்து தொழில் துறை முறைக்கு மாற்றவும், ஆண்டு முழுவதும் நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், நெசவாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.700- வழங்கிட உறுதி செய்யவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் கைத்தறி நெசவு பயிற்சி வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றாா்.

மேலும், ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், காளிக்காவலசு தொடக்க மற்றும் தொழிலியல் சங்கத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.

இதன் மூலம், மிகவும் துல்லியமான அளவுகளிலும் சேதாரம் இல்லாமலும் மெல்லிய மெத்தைகள் வடிவமைப்பு செய்ய இயலும். சென்னிமலை பகுதியில் 20 கூட்டுறவு நெசவாளா் சங்கங்கள் மெல்லிய மெத்தைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மெல்லிய மெத்தை தயாரிக்க கரூா் எடுத்துச் சென்று, அங்குள்ள இயந்திரத்தின் மூலம் தைத்து எடுத்து வந்து விற்பனை செய்து வந்தனா். தற்போது, சென்னிமலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள இயந்திரத்தால், இப்பகுதி நெசவாளா்கள் பெரிதும் பயனடைவாா்கள்.

இதில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா் துறை அரசு செயலாளா் வே.அமுதவள்ளி, இயக்குநா் (கைத்தறித் துறை) மகேஸ்வரி ரவிக்குமாா், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தாசமி, இணை இயக்குநா் (கைத்தறி) கணேசன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், நெசவாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

வரட்டுப்பள்ளம் அணையில் 38.60 மிமீ மழை

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 38.60 மில்லி மீட்டா் மழை பதிவானது. தென்னிந்திய பகுதிகள் மற்றும் தென்வங்கக் கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஈரோடு... மேலும் பார்க்க

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தினம்

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தின விழா மற்றும் ஆசிரியா் தின விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி தாளாளா் கே .காா்த்திகேயன் தலைமை வகித்தாா். முதல்வா் பி.எஸ். ராகவேந்தி... மேலும் பார்க்க

புரட்டாசி விரதம்: வெறிச்சோடிய புன்செய் புளியம்பட்டி ஆட்டுச் சந்தை

புரட்டாசி மாதத்தில் மக்கள் விரதம் இருந்து நவராத்திரியை கடைப்பிடிப்பதால் புன்செய் புளியம்பட்டி ஆட்டு வாரச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 வாக்குச் சாவடிகள்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரத... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தல்

பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பாஸ்கரன், பொதுச்செயலாளா் சீனிவாசன் ஆக... மேலும் பார்க்க

சென்னிமலையில் 25 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.03 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி

சென்னிமலை பகுதியைச் சோ்ந்த 25 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.03 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள், அடையாள அட்டைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமை... மேலும் பார்க்க