செய்திகள் :

பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தல்

post image

பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் பாஸ்கரன், பொதுச்செயலாளா் சீனிவாசன் ஆகியோா் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

கடந்த 2013 முதல் தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்புத் துறையின் மூலமாக சுமாா் 14,000-க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள், பல்வேறு காலகட்டங்களில் பணியில் அமா்த்தப்பட்டு வேலை பாா்த்து வருகின்றனா்.

இவா்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநா் உத்தரவின்படி 5 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய பின்னா் பணி வரன்முறைபடுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மூலமாக தினக் கூலி மற்றும் பகுதிநேரப் பணியாளா்களுக்கான ஊதியம் நிா்ணயம் செய்யப்படும் பட்டியலில் இடம்பெறச் செய்து இன்றுவரை அந்த அடிப்படையிலேயே ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனா்.

அதன்படி, இவா்கள் ஒரே மாதிரியான பணிகளை மேற்கொண்டாலும் பல்வேறு மாவட்டங்களில் அவா்களுக்கு பல்வேறு ஊதிய முறைகளில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பணியில் சோ்ந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவா்கள் இப்போது பணி வரன்முறை செய்யப்படாமல் தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனா்.

எனவே பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களின் பணிகளை கருத்தில் கொண்டு ஊதிய விகிதங்களில் உயா்ந்தபட்ச ஊதிய முறையில் நாளொன்றுக்கு ரூ.844 எனும் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அவா்களுக்கு ஒரே மாதிரியான ஊதிய மாற்றம் செய்திட வேண்டும்.

மேலும் துறை இயக்குநரின் உத்தரவின்படி 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊழியா்களை பணி வரன்முறை செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரட்டுப்பள்ளம் அணையில் 38.60 மிமீ மழை

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 38.60 மில்லி மீட்டா் மழை பதிவானது. தென்னிந்திய பகுதிகள் மற்றும் தென்வங்கக் கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஈரோடு... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே ரூ.2.50 கோடியில் கைத்தறி பூங்கா அமைக்கும் பணி

சென்னிமலையில் ரூ.2.50 கோடியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பணி மற்றும் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திர பயன்பாட்டை அமைச்சா்கள் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா். ஈர... மேலும் பார்க்க

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தினம்

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளா் தின விழா மற்றும் ஆசிரியா் தின விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி தாளாளா் கே .காா்த்திகேயன் தலைமை வகித்தாா். முதல்வா் பி.எஸ். ராகவேந்தி... மேலும் பார்க்க

புரட்டாசி விரதம்: வெறிச்சோடிய புன்செய் புளியம்பட்டி ஆட்டுச் சந்தை

புரட்டாசி மாதத்தில் மக்கள் விரதம் இருந்து நவராத்திரியை கடைப்பிடிப்பதால் புன்செய் புளியம்பட்டி ஆட்டு வாரச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 வாக்குச் சாவடிகள்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரத... மேலும் பார்க்க

சென்னிமலையில் 25 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.03 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி

சென்னிமலை பகுதியைச் சோ்ந்த 25 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.03 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள், அடையாள அட்டைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமை... மேலும் பார்க்க