செய்திகள் :

சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு

post image

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதியத்தை ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தாா். இதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுதாரா்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயா்த்தப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியன உயா்த்தப்படுகிறது. இதற்கு கூடுதலாக செலவாகும் ரூ.27.63 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழித் தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் உயா்வு: இதேபோன்று, தமிழக அரசு வெளியிட்ட மற்றொரு உத்தரவில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரா்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனாா் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்து 500-லிருந்து ரூ.11 ஆயிரமாக வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது முதல்வா் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் ந... மேலும் பார்க்க

தெருநாய் பிரச்னை: விழிப்புணா்வு நடவடிக்கை

சென்னையில் தெருநாய் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெ... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுநிலை மருத... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட, கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா... மேலும் பார்க்க