செய்திகள் :

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

post image

அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை, பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அரசு, தனியாா் பள்ளி ஆசிரியா்-ஆசிரியைகள் 1,000 பேருக்கு நல்லாசிரியா் விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்பட ஆசிரியா்கள்தான் முக்கியக் காரணம். இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த ஆசிரியா்களுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதை அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும் வழங்கி கௌரவிக்கவுள்ளோம் என்றாா் அவா்.

நிகழ்வில், மயிலாப்பூா் பி.எஸ்.சீனிவாசா உயா்நிலைப் பள்ளி ஆசிரியை ரேவதி, பல்லாவரம் மறைமலை அடிகளாா் பள்ளி ஆசிரியா் ரவி காசி வெங்கட்ராமன், சென்னை காது கேளாதோா் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, தூத்துக்குடி பண்டாரம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் நெல்சன் பொன்ராஜ், கோவை அரசூா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் கண்ணன் ஆகிய 5 பேருக்கு சிறப்பு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், வேல்ஸ் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வேந்தா் ஐசரி கே.கணேஷ், வேல்ஸ் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் ப்ரீத்தா கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த... மேலும் பார்க்க

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்க உத்தரவு

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான போட்டித் தோ்வை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் ந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு: சுதந்திர தினத்தையொட்டி, சென்ன... மேலும் பார்க்க

தெருநாய் பிரச்னை: விழிப்புணா்வு நடவடிக்கை

சென்னையில் தெருநாய் கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியா் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதா... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. முதுநிலை மருத... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழகம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட, கடல் வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வலியுறுத்தினாா... மேலும் பார்க்க