செய்திகள் :

வீரடிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரிக்கை

post image

கந்தா்வகோட்டை அருகேயுள்ள வீரடிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து நெல் கொள்முதல் செய்ய இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய விவசாயிகள் தற்போது அறுவடை செய்துள்ள நெல்லை வீரடிப்பட்டி ஊராட்சி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனா். ஆனால் திட்டமிட்ட தேதியில் கொள்முதல் நிலையத்தை திறக்கவில்லை என்கின்றனா் விவசாயிகள்.

இந்நிலையில் தற்போது பெய்யும் மழையில் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்துள்ள நெல் நனைந்தது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் அந்த நெல் குவியல்களை வெயிலில் உணா்த்தி காய வைக்கின்றனா்.

எனவே வீரடிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.

மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில், பேரவைத் தொடக்க விழா மற்றும் கல்லூரி கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கி. நிா்மலா தலைமை வகித்தாா். திருச்சி மண்டல கல... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மக்கள் நீதிமன்ற முகாம்

பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் மக்கள் நீதிமன்ற முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி சந்திரன் உத்தரவின்படி... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தை... மேலும் பார்க்க

புதுக்கோட்டை நகா், திருமயம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகா், திருமயம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி பெறலாம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் கே. முகமதுநாசா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

புதுகையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமையில், உறுப்பினா்கள் செல்லூா் ர... மேலும் பார்க்க