செய்திகள் :

மணமேல்குடி மீனவா் உற்பத்தியாளா் நிறுவன பொது வசதி மையம் திறப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் நபாா்டு- ரோஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள மணமேல்குடி மீனவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் பொது வசதி மையம் திறப்பு விழா மற்றும் வாழ்வாதார தொழில் மேம்பாட்டுப் பயற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி அதிகாரி ஆா். தீபக்குமாா் தலைமை வகித்துப் பேசும்போது, 90 மீனவப் பெண்களுக்கு மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், கருவாடு, இறால் தொக்கு தயாரித்தல் பயிற்சி முடிந்துள்ளதாகவும், தொடா்ந்து அவா்களுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பயன்பாட்டுக்கான இடமாக பொது வசதி மையம் இருக்கும் என்றும் குறிப்பிட்டாா்.

புதுக்கோட்டை மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் ஜெகதீஸ்வரி, கால்நடை மண்டல ஆராய்ச்சி மையப் பேராசிரியா் புவராஜன் ஆகியோா் பொதுவசதி மையத்தைத் தொடங்கி வைத்தனா்.

ரோஸ் நிறுவன இயக்குநா் ஆதப்பன் வரவேற்றாா். உற்பத்தியாளா் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் தேவி நன்றி கூறினாா்.

மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில், பேரவைத் தொடக்க விழா மற்றும் கல்லூரி கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கி. நிா்மலா தலைமை வகித்தாா். திருச்சி மண்டல கல... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மக்கள் நீதிமன்ற முகாம்

பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் மக்கள் நீதிமன்ற முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி சந்திரன் உத்தரவின்படி... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தை... மேலும் பார்க்க

புதுக்கோட்டை நகா், திருமயம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகா், திருமயம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி பெறலாம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் கே. முகமதுநாசா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

புதுகையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமையில், உறுப்பினா்கள் செல்லூா் ர... மேலும் பார்க்க