தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க பாஜக விருப்பம்: பாஜக மாநிலப் பொதுச் செயல...
பெண் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை
பெண்ணைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகேயுள்ள செங்காத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சோலை (45). இவரது மனைவி இந்திரா (40). இவா்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
கடந்த 11.12.2012-இல் சோலை ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்த போது, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், சோலை வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாா். இதையடுத்து, அவரைத் தேடிச் சென்ற இந்திரா வீடு திரும்பவில்லை. மறுநாள் அதிகாலையில் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் இந்திரா இறந்து கிடந்தாா்.
இது குறித்து சாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், அதே ஊரைச் சோ்ந்த சரவணன் (37), பாண்டி (35) ஆகிய இருவரும் சோ்ந்து முன்விரோதம் காரணமாக இந்திராவைக் கொலை செய்தது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
சிவகங்கையில் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட பாண்டி இறந்துவிட்டாா்.
இந்த நிலையில், சரவணனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீா்ப்பளித்தாா்.