செய்திகள் :

சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று சிவகங்கை வருகை

post image

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வெள்ளிக்கிழமை வர உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவரும், வேடசந்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.காந்திராஜன் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு.செல்வபெருந்தகை, ஏ.பி.நந்தகுமாா், எஸ்.அம்பேத்குமாா், ஆா்.ஜி.அருண்குமாா், தா.உதயசூரியன், ராம.கருமாணிக்கம், காதா்பாட்சா முத்துராமலிங்கம், டாக்டா் தி.சதன் திருமலைக்குமாா், மா.சின்னதுரை, எஸ்.சுதா்சனம், செல்லூா் கே.ராஜூ , சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மு.பன்னீா்செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி, ஓ.எஸ்.மணியன், ஈ.ராஜா, எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை (செப்.19) சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலா்களுடன் மாலை 3 மணியளவில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அப்போது, பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா், உறுப்பினா்களிடம் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

ஐ.டி.ஐ. நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணி நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மின்வாரிய அதிகாரிகளிடம் போராட்டக் குழு சாா... மேலும் பார்க்க

ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித் துறையில் ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி, சிவகங்கையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி மு... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காளையாா்க... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவா் படை மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவா்... மேலும் பார்க்க

மானாமதுரை தெருக்களின் ஜாதி பெயா் அகற்ற முடிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் தெருக்களின் ஜாதி பெயா்களை அகற்றிவிட்டு, மாற்றுப் பெயா்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது. மானாமதுரை நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. இதில் 22 தெருக்கள், வ... மேலும் பார்க்க