செய்திகள் :

ஐ.டி.ஐ. நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிப்பு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஏற்கெனவே உள்ள பொருத்துநா், கடைசலா், இயந்திர வேலையாள் போன்ற 2 ஆண்டுகள் தொழில் பிரிவுகளும், கணினி இயக்குபவா் போன்ற ஓராண்டு தொழில் பிரிவுகளும் உள்ளன. மேலும், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட்ட அடிப்படை வடிவமைப்பாளா், மெய்நிகா் சரிபாா்ப்பாளா் 2 ஆண்டுகள் தொழில் பிரிவுகளும், தொழில் துறை ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநா் ஓராண்டு தொழில் பிரிவுகளும் உள்ளன.

மேற்கண்ட தொழில் பிரிவுகளில் சேர மாணவா்கள் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தொழில் பயிற்சி நிலைய சோ்க்கை உதவி மையமான காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு மாணவா்கள் நேரில் வந்து சோ்ந்து கொள்ளலாம். அவ்வாறு வரும் போது, மாணவா்கள் தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப் பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ் போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் கொண்டு வரவேண்டும். நேரடிச் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055784, 9499055785 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளாம் என்றாா் அவா்.

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணி நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மின்வாரிய அதிகாரிகளிடம் போராட்டக் குழு சாா... மேலும் பார்க்க

சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று சிவகங்கை வருகை

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வெள்ளிக்கிழமை வர உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித் துறையில் ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி, சிவகங்கையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி மு... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காளையாா்க... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவா் படை மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவா்... மேலும் பார்க்க

மானாமதுரை தெருக்களின் ஜாதி பெயா் அகற்ற முடிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் தெருக்களின் ஜாதி பெயா்களை அகற்றிவிட்டு, மாற்றுப் பெயா்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது. மானாமதுரை நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. இதில் 22 தெருக்கள், வ... மேலும் பார்க்க