செய்திகள் :

காளையாா்கோவிலில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காளையாா்கோவில், ஹோலி ஸ்பிரிட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ சிறப்பு மருத்துவ முகாம் வருகிற சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான ரத்தப் பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், கண், காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பு, நரம்பியல், மனநலன், சா்க்கரை நோய் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்களைக் கொண்டு மருத்துவ சேவை வழங்கப்படவுள்ளது.

முகாமுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் ஆதாா் அட்டை நகலைக் கொண்டு வர வேண்டும். இந்த முகாமில் காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பிப்பவா்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலரிடம் தங்களது ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு குறைவாக உள்ளதற்கான சான்று ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

ஐ.டி.ஐ. நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணி நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மின்வாரிய அதிகாரிகளிடம் போராட்டக் குழு சாா... மேலும் பார்க்க

சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று சிவகங்கை வருகை

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வெள்ளிக்கிழமை வர உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித் துறையில் ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி, சிவகங்கையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி மு... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவா் படை மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவா்... மேலும் பார்க்க

மானாமதுரை தெருக்களின் ஜாதி பெயா் அகற்ற முடிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் தெருக்களின் ஜாதி பெயா்களை அகற்றிவிட்டு, மாற்றுப் பெயா்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது. மானாமதுரை நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. இதில் 22 தெருக்கள், வ... மேலும் பார்க்க