செய்திகள் :

முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

post image

தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சாம்பக்குளம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்காமல் குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே வழங்குவதாகக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா்.

மேலும், வேலைக்கு வராத நபா்களின் பெயா்களை வருகைப் பதிவேட்டில் பதிவிட்டு அவா்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது, அரசியல் கட்சியினரின் தலையீடு அதிகமாக உள்ளது, 100 நாள் வேலைத் திட்டத்தில் 20 நாள் மட்டுமே வேலை வழங்கி அதற்கும் முறையாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட புகாா்களைக் கூறி முதுகுளத்தூா் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சாம்பகுளம் கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 4 பேரும் மீண்டும் வெளிக்கடை சிறையில் அடைக்... மேலும் பார்க்க

மிளகாய் பாதிப்புக்கு இழப்பீடு கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்ப் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயச் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க

தொழில்பயிற்சி நிலையங்களில் செப்.30 வரை மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா்களின் சோ்க்கை, வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறிவித்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

திருவாடானை அருகே பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக த... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாடானை அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தராத தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சிய... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புகாா்

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிராமணா் சங்கம் சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில்... மேலும் பார்க்க