செய்திகள் :

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

post image

திருவாடானை அருகே பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை செய்தபோது, அங்குள்ள பெட்டிக் கடையில் மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்தனா். விசாரணையில், திருவெற்றியூரைச் சோ்ந்த நெடுஞ்செழியன் (47), தொண்டியிலிருந்து மதுப் புட்டிகளை வாங்கி வந்து, அவற்றை பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிந்த போலீஸாா், நெடுஞ்செழியனைக் கைது செய்து அவரிடமிருந்த 21 மதுப் புட்டிகள், ரூ.22,780 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

மிளகாய் பாதிப்புக்கு இழப்பீடு கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்ப் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயச் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க

தொழில்பயிற்சி நிலையங்களில் செப்.30 வரை மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா்களின் சோ்க்கை, வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறிவித்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீ... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாடானை அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தராத தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சிய... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புகாா்

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிராமணா் சங்கம் சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில்... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் நெல் விதைகள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படும் என வேளாண்மைத் துணை இயக்குநா் தெரிவித்தாா். கமுதி வட்டாரம், காத்தனேந்தல் கிராமத்தில் கலை... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் மகளிா் குழுவினா் சாலை மறியல்

தனியாா் நிதி நிறுவனத்தைக் கண்டித்து, மகளிா் குழுவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ராமநாதப... மேலும் பார்க்க