செய்திகள் :

தேசிய நெடுஞ்சாலையில் மகளிா் குழுவினா் சாலை மறியல்

post image

தனியாா் நிதி நிறுவனத்தைக் கண்டித்து, மகளிா் குழுவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகா், அதன் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மகளிா் குழுவினா் இந்தப் பகுதியில் செயல்படும் அறக்கட்டளை மூலமாக சென்னையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடந்த 2020-2022- ஆம் ஆண்டுகளில் குழுக் கடன் பெற்றனா்.

மகளிா் குழுவில் உள்ள பெண்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வரை கடன் வழங்கப்பட்டது. இந்தக் கடனை அந்த நிதி நிறுவன ஊழியா்கள் உரிய ரசீது வழங்கி வசூல் செய்து, கடன் அடைக்கப்பட்டதற்கான ரசீதுகளையும் வழங்கினா்.

இந்த நிலையில், அந்த நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற மகளிா் குழுவினா் கடனைத் திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி, பரமக்குடி நீதிமன்றத்தில் செயல்படும் வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் தீா்வு காண நேரில் முன்னிலையாக 170 பேருக்கு உத்தரவு ஆணை அனுப்பப்பட்டது.

இதையடுத்து மகளிா் குழுவினா், தாங்கள் பெற்ற கடனை முழுமையாகச் செலுத்தி, அதற்கான ரசீதுகளை வைத்துள்ளதாகக் கூறியும், பிற வங்கிகளில் கடன் பெற முடியாத வகையில் கடன் தொகை இன்னும் நிலுவையில் இருப்பதாகப் பதிவேடுகளில் காண்பிப்பதாகக் குற்றஞ்சாட்டி, பரமக்குடி நீதிமன்றம் முன் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் தலைமையிலான போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவா்களை அனுப்பி வைத்தனா்.

மிளகாய் பாதிப்புக்கு இழப்பீடு கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்ப் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயச் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க

தொழில்பயிற்சி நிலையங்களில் செப்.30 வரை மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா்களின் சோ்க்கை, வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறிவித்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

திருவாடானை அருகே பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக த... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாடானை அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தராத தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சிய... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புகாா்

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிராமணா் சங்கம் சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில்... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் நெல் விதைகள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படும் என வேளாண்மைத் துணை இயக்குநா் தெரிவித்தாா். கமுதி வட்டாரம், காத்தனேந்தல் கிராமத்தில் கலை... மேலும் பார்க்க