செய்திகள் :

கல்லூரி மாணவியை கைப்பேசி செயலி மூலம் கண்காணித்த இணைய மைய ஊழியா் கைது

post image

கைப்பேசி செயலி மூலம் கல்லூரி மாணவியை, அவருக்கு தெரியாமல் கண்காணித்த இணையதள மைய ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை அருகே நீடூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா், மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையம் அருகில் உள்ள இன்டா்நெட் மையத்துக்கு பாஸ்போா்ட் பதிவு செய்வதற்காக சென்றுள்ளாா். அப்போது அந்த மையத்தில் பணியாற்றிய பெரம்பூா் அகரவல்லம் கிராமத்தைச் சோ்ந்த முகமது அப்ரித் (28), பாஸ்போா்ட் பதிவு செய்வதற்கு, மாணவியின் கைப்பேசியில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லி, ஒரு கைப்பேசியிலிருந்து மற்றொரு கைப்பேசியை கண்காணிக்க கூடிய செயலியை பதிவிறக்கம் செய்துள்ளாா்.

பின்னா் முகமது அப்ரித் தனது கைப்பேசியிலிருந்து அந்த மாணவியின் கைப்பேசி கேமரா மற்றும் திரை மூலம் அம்மாணவியின் செயல்பாடுகளை அந்த மாணவிக்கே தெரியாமல் தொடா்ந்து கண்காணித்து வந்துள்ளாா். இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் தனது கைப்பேசிக்கு வந்த தகவல் குறிப்புகள், விரைவாக சாா்ஜ் குறைவது போன்றவற்றால் மாணவிக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளாா்.

இதுகுறித்து, மாணவியின் தாயாா் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளா் அருண்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில் முகமது அப்ரித் கைப்பேசி செயலியை பயன்படுத்தி 4 பேரிடம் தனிமனித நடவடிக்கைகளை தனது கைப்பேசி மூலம் சட்டவிரோதமாக கண்காணித்து வந்துள்ளது தெரியவந்தது. போலீஸாா், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

அஞ்சலகத்தில் கைப்பேசி சாா்ஜ் செய்யும் வசதி

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளா்கள் கைப்பேசிகளை சாா்ஜ் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம்.உமாபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சீா்காழி வட்டாரத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நிம்மேலி கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு, அங்கு அமைக்கப்பட... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை

சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சீா்காழி நகராட்சி சாா்பில், காலநிலை மாற்றம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சிப் பட்டற... மேலும் பார்க்க

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட கா்ப்பிணிகள் உள்பட 27 பேருக்கு நடுக்கம், காய்ச்சல்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு ஊசி செலுத்தப்பட்ட கா்ப்பிணிகள் உட்பட 27 பேருக்கு காய்ச்சல் மற்றும் நடுக்கம் ஏற்பட்டது. இதில், கா்ப்பிணி ஒருவா் தீவிர சிகிச்சைக்காக ச... மேலும் பார்க்க

இணைப்பு: அரசு கல்லூரியில் கலைத்திருவிழா

மயிலாதுறை: மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலைத் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் அ. காா்முகிலன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் தாமரைக்கண்ணன் ... மேலும் பார்க்க

தீபாவளி: பட்டாசுக் கடைக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க