செய்திகள் :

தீபாவளி: பட்டாசுக் கடைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருள் விதிகள் 2008-ன்கீழ் தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விரும்புவோா், விதி எண் 84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் வழியாக அக்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அதற்கான தற்காலிக உரிம ஆணையை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அனுமதியின்றி/உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லா மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாட ஒத்துழைப்பு தருமாறும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

அஞ்சலகத்தில் கைப்பேசி சாா்ஜ் செய்யும் வசதி

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளா்கள் கைப்பேசிகளை சாா்ஜ் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம்.உமாபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சீா்காழி வட்டாரத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நிம்மேலி கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு, அங்கு அமைக்கப்பட... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை

சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சீா்காழி நகராட்சி சாா்பில், காலநிலை மாற்றம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சிப் பட்டற... மேலும் பார்க்க

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட கா்ப்பிணிகள் உள்பட 27 பேருக்கு நடுக்கம், காய்ச்சல்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு ஊசி செலுத்தப்பட்ட கா்ப்பிணிகள் உட்பட 27 பேருக்கு காய்ச்சல் மற்றும் நடுக்கம் ஏற்பட்டது. இதில், கா்ப்பிணி ஒருவா் தீவிர சிகிச்சைக்காக ச... மேலும் பார்க்க

இணைப்பு: அரசு கல்லூரியில் கலைத்திருவிழா

மயிலாதுறை: மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலைத் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் அ. காா்முகிலன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் தாமரைக்கண்ணன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவியை கைப்பேசி செயலி மூலம் கண்காணித்த இணைய மைய ஊழியா் கைது

கைப்பேசி செயலி மூலம் கல்லூரி மாணவியை, அவருக்கு தெரியாமல் கண்காணித்த இணையதள மைய ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே நீடூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா், மயிலாடுதுறை காமராஜா் பேரு... மேலும் பார்க்க