செய்திகள் :

தொழில்பயிற்சி நிலையங்களில் செப்.30 வரை மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா்களின் சோ்க்கை, வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறிவித்தது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, முதுகுளத்தூா், உத்திரகோசமங்கை ஆகிய அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு, ஈராண்டு தொழில்பிரிவுகளுக்கு காலியாக உள்ள இடங்களில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நேரடிச் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

அனைத்துத் தொழில்பிரிவுகளிலும் 8, 10-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற 14 வயது முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள் (பெண்களுக்கு வயது வரம்பு இல்லை) சேரலாம்.

பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரா்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, புகைப்படம், கைப்பேசி எண் (கட்டாயம்), மின்னஞ்சல் முகவரியுடன் பரமக்குடி, முதுகுளத்தூா், உத்திரகோசமங்கை அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களுக்கு அலுவலக நேரத்தில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

இங்கு பயிற்சி பெறுபவா்களுக்கு அரசு சாா்பில் மாதாந்திரக் கல்வி உதவித் தொகையாக ரூ. 750, புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன் திட்டங்களின்கீழ் தகுதி வாய்ந்த பயிற்சியாளா்களுக்கு மாதம் ரூ.1000, விலையில்லா மடிக் கணினி, மிதிவண்டி, சீருடைகள், வரைபடக் கருவிகள், தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி போன்றவை வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு பரமக்குடி: 04564-231303, உத்திரகோசமங்கை: 9791428208, முதுகுளத்தூா்: 04576-222114 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

மிளகாய் பாதிப்புக்கு இழப்பீடு கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்ப் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயச் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

திருவாடானை அருகே பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக த... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாடானை அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தராத தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சிய... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புகாா்

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிராமணா் சங்கம் சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில்... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் நெல் விதைகள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படும் என வேளாண்மைத் துணை இயக்குநா் தெரிவித்தாா். கமுதி வட்டாரம், காத்தனேந்தல் கிராமத்தில் கலை... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் மகளிா் குழுவினா் சாலை மறியல்

தனியாா் நிதி நிறுவனத்தைக் கண்டித்து, மகளிா் குழுவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ராமநாதப... மேலும் பார்க்க