செய்திகள் :

மிளகாய் பாதிப்புக்கு இழப்பீடு கோரி மனு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்ப் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயச் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் சுமாா் 16,500 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்ட மிளகாய்ப் பயிா்கள் முற்றிலும் அழுகி சேதமடைந்தன.

இதைத் தொடா்ந்து, மிளகாய்ப் பயிருக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 25,000 வழங்கக் கோரி, தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதுடன் போராட்டங்களும் நடைபெற்றன. வேளாண்மைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த மிளகாய்ப் பயிா்களை ஆய்வு செய்து இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தனா்.

ஆனால், ஓராண்டாகியும் தற்போது வரை மிளகாய்க்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், இழப்பீடு வழங்கக் கோரியும் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் தலைமையிலான நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா்.

இதையடுத்து, எம்.எஸ்.கே.பாக்கியநாதன் செய்தியாளா்களிடம் பேசியதாவது

மிளகாய் பாதிப்புக்கு இழப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். இதுதொடா்பாக ராமநாதபுரத்துக்கு வரவுள்ள தரும் முதல்வா் ஸ்டாலினை நேரில் சந்திக்கவுள்ளோம். தீா்வு கிடைக்காதபட்சத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மிளகாய் விவசாயிகளையும் ஒருங்கிணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.

இதில், மாவட்டத் தலைவா் கோவிந்தன், செயலா் மரகதவேல், நிா்வாகிகள் பொன்னக்கநேரி மிக்கேல், வேலு, தினகரன், ராமலட்சுமி, செல்வா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 4 பேரும் மீண்டும் வெளிக்கடை சிறையில் அடைக்... மேலும் பார்க்க

தொழில்பயிற்சி நிலையங்களில் செப்.30 வரை மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா்களின் சோ்க்கை, வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறிவித்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

திருவாடானை அருகே பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக த... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாடானை அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தராத தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சிய... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புகாா்

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிராமணா் சங்கம் சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில்... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் நெல் விதைகள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படும் என வேளாண்மைத் துணை இயக்குநா் தெரிவித்தாா். கமுதி வட்டாரம், காத்தனேந்தல் கிராமத்தில் கலை... மேலும் பார்க்க