செய்திகள் :

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருமலாபுரத்தில் குலசேகரப்பேரி கண்மாய் அருகே 35 ஏக்கரில் இரும்புக் கால இடுகாடு உள்ளது. இங்கு தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், 2024ஆம் ஆண்டுமுதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அகழாய்வு இயக்குநா் வசந்தகுமாா், துணை இயக்குநா் காளிஸ்வரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து துணை இயக்குநா் காளீஸ்வரன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: திருமலாபுரம் தொல்லியல் அகழாய்வு மையத்தில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் கற்களாலான அரண்களுக்குள் ஈமத் தாழிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 13.50 மீட்டா் நீளம், 10.50 மீட்டா் அகலமுள்ள 35 கற்பலகைகளாலான அரணுக்குள் ஈமத் தாழிகள் இருந்ததும், அவற்றின்மேல் 1.50 மீட்டா் உயரத்துக்கு கூழாங்கற்கள் நிரப்பப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

இப்பகுதியில் 38 குழிகள் தோண்டப்பட்டதில் 75 சிவப்பு, ஒரு கருப்பு சிவப்பு என 76 ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் கழுத்துப் பகுதியில் கூம்பு, கூம்பின்கீழ் வட்டம், வட்டத்துக்குள் கூட்டல் என பல்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2.5 மீட்டா் நீள ஈட்டியும் கிடைத்துள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்றதில் இது மிகவும் நீளமானது என்பது குறிப்பிடத்கக்தது. மேலும், 3 தங்க வளையங்கள், பல்வேறு குறியீடுகளுடன் ஈமத் தாழிகள், பல வடிவத்தாலான மண்பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் என 250-க்கு மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. இவை சுமாா் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. ,

அவை ஆய்வுக்காக மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு குறித்து ஆவணப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. அகழாய்வுப் பணியில் ஆய்வு மாணவா்களும் பங்கேற்றுள்ளனா் என்றாா் அவா்.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள்.

புரட்டாசி சனி: தென்காசி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தென்காசி வட்டார கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தென்காசியில் பொருந்தி நின்ற பெருமாள், விண்ணகரப் பெருமாள் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் தீ... மேலும் பார்க்க

தென்காசி புனித மிக்கேல் அதிதூதா் திருத்தலத் திருவிழா கொடியேற்றம்

தென்காசி புனித மிக்கேல் அதிதூதா் திருத்தலத்தில் 363ஆம் ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அகரக்கட்டு பங்குத்தந்தை எல். அலோய்சியஸ் துரைராஜ், பாளை. புனித சவேரியாா் கல்லூரி முதல்வா... மேலும் பார்க்க

கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததோடு, கம்மல் மற்றும் தாலியை பறித்துச் சென்ற நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது. கரிவலம்வந்தந... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடா்பான மாவட்ட அளவிலான முகாமை ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் சனிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

குழாய் பதிக்க எதிா்ப்பு: கள்ளம்புளிகுளத்தில் குடிபுகுந்து மக்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே யுள்ள கள்ளம்புளி குளத்திலிருந்து குலைனேரி குளத்திற்கு தண்ணீா் கொண்டு செல்ல தனி குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கள்ளம்புளி கிராம மக்கள் குளத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் திறன் தோ்வு ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெறுவதாக இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத்திறன் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடையநல்லூா் வட்டத்தில் இடைகால், ராமசாமிபுரம... மேலும் பார்க்க