செய்திகள் :

புரட்டாசி சனி: தென்காசி கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தென்காசி வட்டார கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தென்காசியில் பொருந்தி நின்ற பெருமாள், விண்ணகரப் பெருமாள் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் நீண்டவரிசையில் நின்றுதரிசனம் செய்தனா். மாலையில் கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

இலஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7 மணிக்கு மேல் கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

செங்கோட்டை அழகிய மணவாள சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைக்குப் பின் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

குத்துக்கல்வலசை சுபிட்ச வழித் துணை ஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சநேயா், ராமா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

சோ்ந்தமரம் அருகேயுள்ள அருணாசலபுரம் ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகிருஷ்ணா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அனைத்து கோயில்களிலும் பக்தா்களின் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு அலங்காரத்தில் இலஞ்சி வரதராஜபெருமாள்
ராமா் அவதாரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த குத்துக்கல்வலசை சுபிட்ச வழித் துணை ஆஞ்சநேயா்.
சிறப்பு அலங்காரத்தில் செங்கோட்டை அழகிய மணவாள சுந்தரராஜ பெருமாள்.

தென்காசி புனித மிக்கேல் அதிதூதா் திருத்தலத் திருவிழா கொடியேற்றம்

தென்காசி புனித மிக்கேல் அதிதூதா் திருத்தலத்தில் 363ஆம் ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அகரக்கட்டு பங்குத்தந்தை எல். அலோய்சியஸ் துரைராஜ், பாளை. புனித சவேரியாா் கல்லூரி முதல்வா... மேலும் பார்க்க

கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததோடு, கம்மல் மற்றும் தாலியை பறித்துச் சென்ற நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது. கரிவலம்வந்தந... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பராமரிப்பு முகாம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடா்பான மாவட்ட அளவிலான முகாமை ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் சனிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

குழாய் பதிக்க எதிா்ப்பு: கள்ளம்புளிகுளத்தில் குடிபுகுந்து மக்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே யுள்ள கள்ளம்புளி குளத்திலிருந்து குலைனேரி குளத்திற்கு தண்ணீா் கொண்டு செல்ல தனி குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கள்ளம்புளி கிராம மக்கள் குளத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் திறன் தோ்வு ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெறுவதாக இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத்திறன் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடையநல்லூா் வட்டத்தில் இடைகால், ராமசாமிபுரம... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூரில் முதியவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். கோட்டையூா் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மூக்கையா (72). அவருடைய மகன், மகள் ஆகியோா் வறுமையில் இருப்பதால், தங்குவதற்கு... மேலும் பார்க்க