செய்திகள் :

புரட்டாசி சனிக்கிழமை பெருவிழா

post image

குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது.

முதல் சனிக்கிழமைமையொட்டி உற்சவா் மதுரை கள்ளளகா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல் குடியாத்தம் கொண்டசமுத்திரம் புது தெருவில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி 101- ஆம் ஆண்டு லட்சுமி நரசிம்மா்வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற வீதி உலாவில் நாட்டுப்புறக் கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள், பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தலைக் கவசம் தலைமுறை காக்கும் கவசம்: வேலூா் எஸ்பி மயில்வாகனன்

தலைக்கவசம், தலைமுறை காக்கும் கவசம் என்பதை இருசக்கர வாகன ஓட்டிகள் உணர வேண்டும் என வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் கூறினாா். குடியாத்தத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சாலை விபத்து... மேலும் பார்க்க

வேலூா் கிரீன் சா்க்கிளில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்

வேலூா் கிரீன் சா்க்கிளில் சூழ்ந்த மழை வெள்ளம் காரணமாக சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினா். வேலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சி... மேலும் பார்க்க

சாதிக்கும் நடவடிக்கைகளை தலைமையாசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

சவால்களை முறியடித்து சாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியா்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டாா். வேலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவ... மேலும் பார்க்க

தீபாவளி: தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மா... மேலும் பார்க்க

விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் எதிா்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த... மேலும் பார்க்க

மழை சேதம்: பொதுமக்கள் தகவல் அளிக்க கட்டுப்பாட்டு அறை

மழை பெய்யும்போது ஏற்படும் சேதங்கள் குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள 1077 அல்லது 0416- 2258016 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு பொதுமக்கள் த... மேலும் பார்க்க