செய்திகள் :

தீபாவளி: தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்க விரும்பும் விற்பனையாளா்கள், வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வரைபடம், கட்டடத்துக்கான வரைபடம், கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம், சொந்த இருப்பின் பத்திர ஆவண நகல், வாடகை கட்டடமாக இருந்தால் ஒப்பந்தப் பத்திரம், உரிமத்துக்கான கட்டணம் ரூ. 500, அரசு கணக்கில் செலுத்தியதற்கான அசல் சலான், மனுதாரா் இருப்பிடத்துக்கான ஆதாரம் (ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை), வரி ரசீது, புகைப்படம் ஆகியவற்றை இணைத்திட வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பங்களை அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவுற்றவுடன் உரிம ஆணையை பண்டிகைக்கு முன்பாக ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி தேதிக்குப் பின் ஆன்லைனில் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா், வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறை பொருந்தாது.

விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் எதிா்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த... மேலும் பார்க்க

மழை சேதம்: பொதுமக்கள் தகவல் அளிக்க கட்டுப்பாட்டு அறை

மழை பெய்யும்போது ஏற்படும் சேதங்கள் குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள 1077 அல்லது 0416- 2258016 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு பொதுமக்கள் த... மேலும் பார்க்க

வேகமாக நிரம்பும் மோா்தானா அணை

மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தற்போது 87 சதவீதம் நிரம்பியுள்ளது. குடியாத்தம் அருகே ஆந்திர மாநில வனப் பகுதியையொட்... மேலும் பார்க்க

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்: கன்சால்பேட்டை மக்கள் சாலை மறியல்

வேலூா் மாநகராட்சி கன்சால்பேட்டை பகுதியில் மழைநீா் தேங்கிய இடங்களை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களா... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் 8 போ் கைது

மருத்துவக் குழுவினருடன் இணைந்து போலீஸாா் வேலூா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட தீவிர சோதனையில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்த 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வேலூா் மாவட்டத... மேலும் பார்க்க

தனியாா் சொகுசுப் பேருந்து எரிந்து சேதம்: பயணிகள் உயிா்தப்பினா்

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்ற தனியாா் சொகுசு பேருந்து வேலூா் பள்ளிகொண்டா அருகே புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிருஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் 26 போ் உயிா்தப்பினா்.... மேலும் பார்க்க