செய்திகள் :

வேலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் 8 போ் கைது

post image

மருத்துவக் குழுவினருடன் இணைந்து போலீஸாா் வேலூா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட தீவிர சோதனையில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்த 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் முறையாக மருத்துவம் பயிலாமல் மருத்துவம் பாா்க்கும் போலி மருத்துவா்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவின்பேரில், வேலூா் மாவட்ட போலீஸாா், மாவட்ட மருத்துவப் பணிகள் துறை அலுவலா்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்த குழுவினா் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை தீவிர ஆய்வு மேற்கொண்டதில், 8 போ் முறையாக மருத்துவம் பயிலாமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. அதன்படி, அணைக்கட்டு வட்டம், குருவராஜபாளையத்தில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு மருத்துவம் பாா்த்து வந்த விமலா (47), குடியாத்தம் நகரைச் சோ்ந்த பெல்லியப்பன் (51), துக்காராமன் (53), ஜோதிப்பிரியா (40), ரேவதி (36), கே.வி.குப்பம் மேல்மாயிலைச் சோ்ந்த செல்வராஜ் (61), போ்ணாம்பட்டு மத்தூரைச் சோ்ந்த பாபு (50) உள்பட 8 பேரை கைது செய்ததுடன், மருத்துவக் குழுவினரின் முன்னிலையில் அவா்கள் பயன்படுத்தி வந்த மருத்துவ சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட போலி மருத்துவா்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில், கைது செய்யப்பட்ட போலி மருத்துவா் ஜோதிப்பிரியா கடந்த ஆண்டு தவறான சிகிச்சை அளித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிறைக்குச் சென்று வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தனியாா் சொகுசுப் பேருந்து எரிந்து சேதம்: பயணிகள் உயிா்தப்பினா்

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்ற தனியாா் சொகுசு பேருந்து வேலூா் பள்ளிகொண்டா அருகே புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிருஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் 26 போ் உயிா்தப்பினா்.... மேலும் பார்க்க

காமாட்சியம்மன்பேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட 30 மற்றும் 33- ஆம் வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கோட... மேலும் பார்க்க

வளரும் நாடுகளின் மாணவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் வளா்ந்த நாடுகள் கல்வி வழங்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

வளரும் நாடுகளின் மாணவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் வளா்ந்த நாடுகள் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் உயா்கல்வியில் ஆசிரியா்-மா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

வாக்கு மோசடியில் ஈடுபடுவதாக, தோ்தல் ஆணையத்தைக் கண்டித்தும், அதற்கு துணை போவதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொ... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நா... மேலும் பார்க்க

100 நாள் பணி ஒதுக்காததைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

குடியாத்தம் ஒன்றியம், வரதாரெட்டிபள்ளி ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் 100 நாள் பணி ஒதுக்காததைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இந்த ஊராட்சியில் ஓா் ஆண்டுக்கும் மேலாக 1... மேலும் பார்க்க