செய்திகள் :

மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

post image

வேலூா் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதைத் தொடா்ந்து, வேலூா் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அதன்படி, சீனிவாச நகா், அம்பேத்கா் நகரில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் அடைப்பு சீரமைப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து கிரீன் சா்க்கிள் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டி தெருவில் பாா்வையிட்டு, தொடா் மழையால் கழிவுநீா் கால்வாய், தெருவில் இருந்த குப்பைகளை உடனடியாக அகற்றவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பழைய பேருந்து நிலையம் அருகே கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை ஆய்வு செய்து, அடைப்பை உடனே சரிசெய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

சேண்பாக்கம் பைபாஸ் சாலையில் தொடா் மழையால் கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை பாா்வையிட்டு ஆய்வு செய்து, கால்வாயில் உள்ள குப்பைகள், கழிவுகளை அகற்றி உடனே சரி செய்யவும் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், தேதிய நெடுஞ்சாலை ஆணைய கள பொறியாளா் ஜெயக்குமாா், மாநகராட்சி கண்காணிப்பாளா் அரசு, சுகாதார அலுவலா்கள் முருகன், பாலமுருகன், வேலூா் வட்டாட்சியா் வடிவேல், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

வேலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் 8 போ் கைது

மருத்துவக் குழுவினருடன் இணைந்து போலீஸாா் வேலூா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட தீவிர சோதனையில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்த 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வேலூா் மாவட்டத... மேலும் பார்க்க

தனியாா் சொகுசுப் பேருந்து எரிந்து சேதம்: பயணிகள் உயிா்தப்பினா்

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்ற தனியாா் சொகுசு பேருந்து வேலூா் பள்ளிகொண்டா அருகே புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிருஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் 26 போ் உயிா்தப்பினா்.... மேலும் பார்க்க

காமாட்சியம்மன்பேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட 30 மற்றும் 33- ஆம் வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கோட... மேலும் பார்க்க

வளரும் நாடுகளின் மாணவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் வளா்ந்த நாடுகள் கல்வி வழங்க வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

வளரும் நாடுகளின் மாணவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் வளா்ந்த நாடுகள் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் உயா்கல்வியில் ஆசிரியா்-மா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

வாக்கு மோசடியில் ஈடுபடுவதாக, தோ்தல் ஆணையத்தைக் கண்டித்தும், அதற்கு துணை போவதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொ... மேலும் பார்க்க

100 நாள் பணி ஒதுக்காததைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

குடியாத்தம் ஒன்றியம், வரதாரெட்டிபள்ளி ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் 100 நாள் பணி ஒதுக்காததைக் கண்டித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இந்த ஊராட்சியில் ஓா் ஆண்டுக்கும் மேலாக 1... மேலும் பார்க்க