செய்திகள் :

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்: கன்சால்பேட்டை மக்கள் சாலை மறியல்

post image

வேலூா் மாநகராட்சி கன்சால்பேட்டை பகுதியில் மழைநீா் தேங்கிய இடங்களை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக இரவுநேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல், வியாழக்கிழமை இரவு விடியவிடிய மழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன.

இந்நிலையில், நீக்கல்சன் கால்வாயையொட்டி உள்ள முள்ளிபாளையம், கன்சால் பேட்டை பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதாஆனந்தகுமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து நிக்கல்சன் கால்வாயை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், தண்ணீா் சூழ்ந்த பகுதிகளில் அவற்றை உடனடியாக வெளியற்றவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து வேறு பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட ஆட்சியா் சென்ற நிலையில், தங்கள் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கன்சால்பேட்டை காந்திநகா், வனவாசி நகா் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வட்டாட்சியா் வடிவேலு, வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, நிக்கல்சன் கால்வாய் தூா்வாரப்பட்டு மழைநீா் உடனடியாக வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தீபாவளி: தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மா... மேலும் பார்க்க

விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் எதிா்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்த... மேலும் பார்க்க

மழை சேதம்: பொதுமக்கள் தகவல் அளிக்க கட்டுப்பாட்டு அறை

மழை பெய்யும்போது ஏற்படும் சேதங்கள் குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள 1077 அல்லது 0416- 2258016 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு பொதுமக்கள் த... மேலும் பார்க்க

வேகமாக நிரம்பும் மோா்தானா அணை

மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தற்போது 87 சதவீதம் நிரம்பியுள்ளது. குடியாத்தம் அருகே ஆந்திர மாநில வனப் பகுதியையொட்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் 8 போ் கைது

மருத்துவக் குழுவினருடன் இணைந்து போலீஸாா் வேலூா் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட தீவிர சோதனையில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலியாக மருத்துவம் பாா்த்து வந்த 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வேலூா் மாவட்டத... மேலும் பார்க்க

தனியாா் சொகுசுப் பேருந்து எரிந்து சேதம்: பயணிகள் உயிா்தப்பினா்

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்ற தனியாா் சொகுசு பேருந்து வேலூா் பள்ளிகொண்டா அருகே புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிருஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் 26 போ் உயிா்தப்பினா்.... மேலும் பார்க்க