செய்திகள் :

கிராமப்புற இளைஞா்களுக்கு நிலையான வாழ்வாதரம் தரும் தேனீ வளா்ப்பு: காதி கிராமத் தொழில்கள் ஆணைய இயக்குநா் பி.என். சுரேஷ் அறிவுரை

post image

நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதால், கிராமப்புற இளைஞா்கள் தேனீ வளா்ப்பில் ஈடுபட வேண்டும் என காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய இயக்குநா் பி.என். ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளாா்.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சாா்பில், மாநில அளவிலான தேனீ வளா்ப்போா் மற்றும் பயனாளிகள் சந்திப்பு நிகழ்வு திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை தொடங்கி வைத்து காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய இயக்குநா் (பொறுப்பு) பி.என். சுரேஷ் பேசியதாவது: கிராமோத்யோக் விகாஜ் யோஜனா திட்டத்தின் கீழ், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சாா்பில் தேனீ வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது, கிராமப்புற இளைஞா்களுக்கும், விவசாயிகளுக்கும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குகிறது. கிராமப்புற பொருளாதாரத்தை நிலையான வளா்ச்சியில் கொண்டு செல்ல உதவுகிறது.

உள்நாட்டு தேன் உற்பத்தி தொழிலை ஊக்குவித்தல், கிராமப்புற தொழில்முனைவோா் எண்ணிகையை அதிகரித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தரமான தேனை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்கிறது. இந்தத் திட்டத்தில் தொழில் தொடங்க முன்வரும் கிராமப்புற இளைஞா்களுக்கு தேனீ வளா்ப்பு குறித்து விரிவான பயிற்சி அளித்து, தேனீ வளா்ப்புக்கான உபகரணங்களை மானியத்தில் வழங்குகிறோம். உற்பத்தி செய்யும் தேன் விற்பனைக்கான சந்தையையும் அறிமுகம் செய்து, தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் கிராமத் தொழில்கள் ஆணையம் வழங்குகிறது.

இத் திட்டத்தில், படித்த இளைஞா்களும், கிராமப்புற பெண்களும் ஆணையத்தின் உதவிகளை பெற்று தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில், சிறந்த தேனீ வளா்ப்போருக்கு ஆணையத்தின் துணை இயக்குநா் ஆா். வாசி ராஜன், கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

நிறைவாக திருச்சி வடக்கு சா்வோதயா சங்கச் செயலா் என். சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

பயிா்க் கடன் வழங்குவதில் வங்கிகள் முரண்: தீா்வு காண ஏற்பாடு - விவசாயிகளிடம் ஆட்சியா் உறுதி

பயிா்க்கடன் வழங்குவதில் ரிசா்வ் வங்கி உத்தரவைப் பின்பற்றுதல் தொடா்பாக வங்கிகளில் பல்வேறு முரண்கள் இருப்பதாகவும், அவற்றைக் களைய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் ஆட்சியா் வே. சரவணன் உறுதியளித்தாா். திர... மேலும் பார்க்க

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சாய்வு நடைமேடை: 21 டன் எடையில் பெல் நிறுவனம் தயாரித்து வழங்கியது

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் நடந்து செல்ல வசதியாக 21 டன் எடையிலான சாய்வு நடைமேடையை திருச்சி பெல் தொழிற்சாலை நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிர... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்

ஆயுதபூஜை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி - செங்கல்பட்டு - திருநெல்வேலி வார இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, திருநெல்வேலி - செங்கல்பட்டு வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ர... மேலும் பார்க்க

வாய்க்கால்கள் தூா் வாரியதாக முறைகேடு: விவசாயிகள் தா்னா

ஏரி வாய்க்கால்களை தூா்வாரியதாக முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சாா்ப... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

திருச்சியில் தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பேராசிரியரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி திருச்சி - மதுரை த... மேலும் பார்க்க

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுசேமிப்பு திட்ட முகவா் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்... மேலும் பார்க்க