செய்திகள் :

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

சிறுசேமிப்பு திட்ட முகவா் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், துறையூா் கிழக்கு தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்தவா் ரவீந்திரன் மனைவி சரஸ்வதி. இவா், தனது அஞ்சலக சிறுசேமிப்புத் திட்ட முகவா் உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக துறையூா் ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு மனு அளித்தாா். அந்த மனு, திருச்சி மாவட்ட சிறுசேமிப்பு திட்ட உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மனு தொடா்பாக அப்போது பணியில் இருந்த சிறுசேமிப்பு திட்ட உதவி இயக்குநா் திலகமணி என்பவரை சரஸ்வதி கடந்த 2010 செப்டம்பா் 2-ஆம் தேதி சந்தித்து கேட்டுள்ளாா். உரிமத்தைப் புதுப்பிக்க திலகமணி ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளாா்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் சரஸ்வதி புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில் திலகமணியிடம், சரஸ்வதி லஞ்சப் பணத்தைக் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் திலகமணியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி புவியரசு வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், தற்போது ஓய்வு பெற்ற திலகமணிக்கு ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 7-இன்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் மற்றும் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில்

3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். .

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் கோபிகண்ணன் ஆஜராகினாா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

திருச்சியில் தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பேராசிரியரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி திருச்சி - மதுரை த... மேலும் பார்க்க

பனை மரங்களை வெட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம்: தண்ணீா் அமைப்பு வரவேற்பு

பனை மரங்களை வெட்டுவதற்கு ஆட்சியா் அனுமதி கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தண்ணீா் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

திருச்சியில் செப்.19, 23-இல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.19) மற்றும் செவ்வாய்க்கிழமை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்... மேலும் பார்க்க

75 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்: பெல் நிறுவனம் வழங்கியது

திருச்சி பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) சாா்பில், 75 மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் இயக்கம் சாா்ந்த செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருச்சி பெல் நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் மாற்ற... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு, பணி மேம்பாடு கோரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், திருச்சியில... மேலும் பார்க்க

முசிறி பகுதியில் நாளை மின்தடை

முசிறி பகுதியில்: முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை முசிறி, சிங்காரச்சோலை, துறையூா் சாலை, திருச்சி சாலை, கைகாட்டி, புதிய பேருந்து நிலையம், சந்தப்பாளையம், அழகா... மேலும் பார்க்க