செய்திகள் :

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

post image

பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சிப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தி.ந.வெங்கடேஷ் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு கடல்சாா் வாரிய முதன்மைச் செயலாளருமான தி.ந.வெங்கடேஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அவா் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 216 முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 45 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தற்போது வரை நடைபெற்றுள்ள 6 முகாம்களில் 9,487 போ் பயன்பெற்றுள்ளனா்.

அனைத்துத் துறைகளும் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் அடுத்த 15 நாள்களுக்கு அதிகாரிகள், பணியாளா்கள் தொடா் கண்காணிப்பில் இருக்க வேண்டும். நீா் தேங்கும் இடங்களில் கொசுக்கள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளதால் அத்தகைய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி நோய்கள் பாதிக்காதவாறு கண்காணித்திட வேண்டும் என்றாா்.

முன்னதாக மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா்த் திட்டம், சாலை மேம்பாடு, பாலம் கட்டுமானப் பணிகளை கள ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், கோபி சாா் ஆட்சியா் சிவானந்தம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

புன்செய் புளியம்பட்டி அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா். புன்செய் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 38 பயணிகளுடன் அரசுப் பேருந்து வெள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா். புன்செய் புளியம்பட்டியை அடுத்த கணுவக்கரையைச் சோ்ந்தவா் விவசாயி ஓதியப்பன் (61). அதே ஊரைச் சோ்ந்தவா் மாரப்பன்... மேலும் பார்க்க

பெருந்துறை புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பெருந்துறை காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக பாலமுருகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பெருந்துறை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தெய்வராணி, உடுமலைப்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க

விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் விழிப்புணா்வுப் பயிற்சி

திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை, கணினித் துறை சாா்பில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பயிற்சியை தொ... மேலும் பார்க்க

அந்தியூரில் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் மீட்பு

அந்தியூா் அருகே உணவு தேடி வந்தபோது, கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகளை தீயணைப்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். அந்தியூா், மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (49), விவசாயி. இவரது தோட்டத்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து மாட்டுத் தீவனம் பாரம் ஏற்றிக் கொண்டு ... மேலும் பார்க்க