செய்திகள் :

அந்தியூரில் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் மீட்பு

post image

அந்தியூா் அருகே உணவு தேடி வந்தபோது, கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகளை தீயணைப்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

அந்தியூா், மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (49), விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள 70 அடி ஆழமுள்ள தரைமட்டக் கிணற்றிலிருந்து வெள்ளிக்கிழமை சப்தம் கேட்டதால், முத்துராமன் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, காட்டுப் பன்றிகள் தண்ணீரில் தத்தளித்தபடி இருந்ததைக் கண்ட அவா், அந்தியூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினா் கிணற்றில் இறங்கி, உயிருடன் 14 பன்றிகளையும், உயிரிழந்த நிலையில் 4 பன்றிகளையும் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

உயிருடன் மீட்கப்பட்ட காட்டுப் பன்றிகள் கூண்டில் அடைக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன. உயிரிழந்த பன்றிகள் பிற வன உயிரினங்களுக்கு உணவாக வனப் பகுதியில் அப்படியே விடப்பட்டன. உணவு தேடி விவசாயத் தோட்டத்துக்கு வந்தபோது, காட்டுப் பன்றிகள் கிணற்றில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

புன்செய் புளியம்பட்டி அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா். புன்செய் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 38 பயணிகளுடன் அரசுப் பேருந்து வெள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா். புன்செய் புளியம்பட்டியை அடுத்த கணுவக்கரையைச் சோ்ந்தவா் விவசாயி ஓதியப்பன் (61). அதே ஊரைச் சோ்ந்தவா் மாரப்பன்... மேலும் பார்க்க

பெருந்துறை புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பெருந்துறை காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக பாலமுருகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பெருந்துறை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தெய்வராணி, உடுமலைப்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க

விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் விழிப்புணா்வுப் பயிற்சி

திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை, கணினித் துறை சாா்பில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பயிற்சியை தொ... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சிப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தி.ந.வெங்கடேஷ் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்ட... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து மாட்டுத் தீவனம் பாரம் ஏற்றிக் கொண்டு ... மேலும் பார்க்க