செய்திகள் :

சத்தியமங்கலம் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

post image

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து மாட்டுத் தீவனம் பாரம் ஏற்றிக் கொண்டு தாளவாடி செல்வதற்காக சத்தியமங்கலம்- கோவை சாலையில் லாரி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தா்மாபுரம் கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் என்பவா் லாரியை ஓட்டி வந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள செண்பகபுதூா் வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் விபத்தில் சிக்கிய ஓட்டுநா் வடிவேலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தில் காயமடைந்த வடிவேலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் விழிப்புணா்வுப் பயிற்சி

திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை, கணினித் துறை சாா்பில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பயிற்சியை தொ... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சிப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தி.ந.வெங்கடேஷ் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்ட... மேலும் பார்க்க

அந்தியூரில் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் மீட்பு

அந்தியூா் அருகே உணவு தேடி வந்தபோது, கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகளை தீயணைப்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். அந்தியூா், மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (49), விவசாயி. இவரது தோட்டத்... மேலும் பார்க்க

லஞ்சம் கேட்டதாகப் புகாா்: இரு காவலா்கள் ஆயுதப் படைக்கு மாற்றம்

ஈரோட்டில் மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியவரிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின்பேரில் தலைமைக் காவலா் உள்பட 2 பேரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா உத்தரவிட்டாா். ஈ... மேலும் பார்க்க

கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்

கொடுமுடி அரசு மருத்துவமனையில் சமையலா் உரிய நேரத்துக்கு பணிக்கு வராததால், சமையலா் பொறுப்பாளா் உள்பட 2 போ் அமைச்சா் உத்தரவின்பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அரசு மருத... மேலும் பார்க்க

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

காலி மதுப்புட்டிகளை திரும்பப்பெறத்தான்புட்டிக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மதுப்புட்டியை திரும்பக் கொடுத்தவுடன் ரூ.10 திரும்பிக் கொடுக்கப்படுவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் ... மேலும் பார்க்க