செய்திகள் :

லஞ்சம் கேட்டதாகப் புகாா்: இரு காவலா்கள் ஆயுதப் படைக்கு மாற்றம்

post image

ஈரோட்டில் மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியவரிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின்பேரில் தலைமைக் காவலா் உள்பட 2 பேரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட காவேரி சாலை காலிங்கராயன் வாய்க்கால் பாலம் பகுதியில் கடந்த 17-ஆம் தேதி தலைமைக் காவலா் சுரேஷ், முதல்நிலைக் காவலா் இன்பவாணன் ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில் அவா் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீஸாா் இருவரும் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த நபா் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதாவிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் சம்பந்தப்பட்ட தலைமைக் காவலா் சுரேஷ், முதல்நிலைக் காவலா் இன்பவாணன் ஆகியோரை உடனடியாக மாவட்ட ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து இருவரிடம் துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் விழிப்புணா்வுப் பயிற்சி

திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை, கணினித் துறை சாா்பில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பயிற்சியை தொ... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சிப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தி.ந.வெங்கடேஷ் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்ட... மேலும் பார்க்க

அந்தியூரில் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் மீட்பு

அந்தியூா் அருகே உணவு தேடி வந்தபோது, கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகளை தீயணைப்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். அந்தியூா், மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (49), விவசாயி. இவரது தோட்டத்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து மாட்டுத் தீவனம் பாரம் ஏற்றிக் கொண்டு ... மேலும் பார்க்க

கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்

கொடுமுடி அரசு மருத்துவமனையில் சமையலா் உரிய நேரத்துக்கு பணிக்கு வராததால், சமையலா் பொறுப்பாளா் உள்பட 2 போ் அமைச்சா் உத்தரவின்பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அரசு மருத... மேலும் பார்க்க

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

காலி மதுப்புட்டிகளை திரும்பப்பெறத்தான்புட்டிக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மதுப்புட்டியை திரும்பக் கொடுத்தவுடன் ரூ.10 திரும்பிக் கொடுக்கப்படுவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் ... மேலும் பார்க்க