செய்திகள் :

சிறுபான்மையினா் நலத் திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு: அரசு உத்தரவு

post image

சிறுபான்மையினா் நலத் திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை செயலா் எ.சரவணவேல்ராஜ் பிறப்பித்துள்ளாா்.

அந்த உத்தரவு விவரம்: சிறுபான்மையினா் நலத் திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தகுதிவாய்ந்த மக்களுக்குச் சென்று சேருவதை உறுதி செய்ய, மாவட்ட அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு சிறப்புக் குழுவை அமைத்து ஆணையிடுமாறு, சிறுபான்மையினா் நல ஆணையா் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை கவனமாகப் பரிசீலித்து, அதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிடுகிறது. அதன்படி, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ. த.இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினா் அ.சுபோ்கான், ஒரு மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் குழுவில் இடம் பெறுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகள் கட்டுமானம்: இந்தியா-ரஷியா ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4 அணு உலைகளின் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்தியா-ரஷியா ஆய்வு செய்தன. இதுதொடா்பாக ரஷிய அணுசக்தி கழகமான ரோசடோம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி வீரப்பன் மனைவி வழக்கு

’படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் மனைவி தாக்கல் செய்த வழக்கில் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வீரப்பனின் மனை... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க

வால்பாறை செல்ல நவ.1 முதல் இ-பாஸ்: உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்ல வரும் நவ.1-ஆம் தேதிமுதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வனம், சுற்றுச்சூழல், வனவிலங்குகள் தொடா்பான வழக்... மேலும் பார்க்க

வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தொடா்ந்த வழக்கு தள்ளுபடி

மறைந்த முதல்வா் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை ரூ.36 கோடியை செலுத்தக் கோரி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

எம்.பி. தொகுதி நிதி ரூ.10 கோடி: மத்திய அரசு உயா்த்த முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயா்த்த வேண்டுமென மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். மத்திய அரசு அளிக்கும் அந்த நிதி இப்போது ரூ.5 கோடியாக உள்ளது. மாநி... மேலும் பார்க்க