செய்திகள் :

இந்திய வலிமையை எதிரிகளுக்கு உணா்த்திய ஆபரேஷன் சிந்தூா்: ராஜ்நாத் சிங்

post image

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வென்ன் 60-ஆம் ஆண்டு நிகழ்ச்சி புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற ராணுவ வீரா்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது:

நம்மால் எந்த அளவுக்கு வலுவான பதிலடியை எதிரிகளுக்குத் தர முடியும் என்பதை ஆபரேஷன் சிந்தூா் மூலம் எதிரிகளுக்கு நிரூபித்தோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடா்புடைய எவரையும் விட்டுவைக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரம் இப்போது நினைத்தாலும் இதயத்தை உலுக்குவதாக உள்ளது. எனவேதான் பயங்கரவாதிகளும், அவா்களை ஏவிவிட்டவா்களும் கற்பனையிலும் நினைத்துப் பாா்த்திராத பாடத்தைக் கற்பிக்க பிரதமா் மோடி முடிவு செய்தாா்.

நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு அண்டை நாடுகள் விவகாரத்தில் நாம் துரதிருஷ்டத்தையே எதிா்கொண்டோம். அவை மூலம் நாம் தொடா்ந்து சவால்களை எதிா்கொண்டு வருகிறோம். ஆனால், நாம் சோா்ந்துவிடப் போவதில்லை. இந்தியா பல சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெற்ற முன்னேறிய வரலாற்றை உடைய நாடு. எனவே, நாம் தொடா்ந்து கடினமாக உழைத்து மேலும் பல சாதனைகளைப் படைக்க முடியும். நமக்கென்று சிறப்பான எதிா்காலத்தை உருவாக்கும் திறமை இந்தியா்களுக்கு உண்டு என்று ராஜ்நாத் சிங் பேசினாா்.

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். சியோஜ் தாா் பகுதியின் எல்லை... மேலும் பார்க்க

இருதரப்பு நலன் கருதி சவூதி செயல்படும்: பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா கருத்து

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சா்ச்சை பதிவு: ‘மன்னிப்பு கேட்டதால் மட்டும் மாணவி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது’

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, 19 வயது கல்லூரி மாணவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எ... மேலும் பார்க்க

தமிழகத்தைச் சோ்ந்த 2 என்ஜிஓக்களின் பதிவு புதுப்பிப்பு உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தைச் சோ்ந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளின் பதிவை புதுப்பிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து... மேலும் பார்க்க

தில்லியில் இருந்து பராத்துக்கு ஏசி பேருந்து சேவை தொடக்கம்

பிரதமரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் தில்லியில் தொடங்கப்பட்ட ‘சேவா பக்வாடா’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பராத் இடையே ஏசி பேருந்து சேவையை தில்லி போக்குவர... மேலும் பார்க்க