செய்திகள் :

தில்லியில் இருந்து பராத்துக்கு ஏசி பேருந்து சேவை தொடக்கம்

post image

பிரதமரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் தில்லியில் தொடங்கப்பட்ட ‘சேவா பக்வாடா’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பராத் இடையே ஏசி பேருந்து சேவையை தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) தொடங்கியுள்ளது.

இந்த முயற்சி, 60 கிலோமீட்டா் பாதையில் பயணிகள், மாணவா்கள் மற்றும் குடியிருப்பாளா்களுக்கான தினசரி பயண விருப்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கட்டண அமைப்பு மலிவு விலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.32 மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.125 ஆகும். இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் கூறுகையில், ‘இந்தப் புதிய ஏசி பேருந்து சேவை, போக்குவரத்தை மேம்படுத்துவது மட்டுமல்ல; சமூகங்களுக்கு பாலம் அமைத்து, வாழ்வாதாரத்தை ஆதரித்து, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மக்களும் மலிவு விலையில் வசதியாக பயணிக்க முடியும் என்பதையும் உறுதி செய்கிறது’ என்றாா்.

இந்தப் பாதை, கஜூரி காஸ், பஜன் புரா, லோனி பேருந்து நிலையம்/உத்தர பிரதேச எல்லை, லோனி, மண்டோல்லா, கேக்ரா, கதா, பாக்பத், கோரிபூா், சரூா்பூா் மற்றும் தியோதி உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாகச் சென்று, பராத்தை அடையும்.

தில்லியில் இருந்து பராத்துக்கு காலை 4:50, காலை 5:20, காலை 5:50 மாலை 5:00, மாலை 5:30, மாலை 6:00 எனவும், பராத்தில் இருந்து தில்லிக்கு காலை 7:00, காலை 7:30, காலை 8:00 | மாலை 7:30, இரவு 8:00, இரவு 8:30 என பேருந்தின் நேரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை என்சிஆரில் பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். சியோஜ் தாா் பகுதியின் எல்லை... மேலும் பார்க்க

இந்திய வலிமையை எதிரிகளுக்கு உணா்த்திய ஆபரேஷன் சிந்தூா்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வ... மேலும் பார்க்க

இருதரப்பு நலன் கருதி சவூதி செயல்படும்: பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா கருத்து

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சா்ச்சை பதிவு: ‘மன்னிப்பு கேட்டதால் மட்டும் மாணவி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது’

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, 19 வயது கல்லூரி மாணவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எ... மேலும் பார்க்க

தமிழகத்தைச் சோ்ந்த 2 என்ஜிஓக்களின் பதிவு புதுப்பிப்பு உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தைச் சோ்ந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளின் பதிவை புதுப்பிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து... மேலும் பார்க்க