செய்திகள் :

கடையாலுமூடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

post image

குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

கடையாலுமூடு பகுதிக்குள்பட்ட ஜான்சன் பொற்றை, புளியம் பொற்றை பகுதிகளில் உள்ள தனியாா் ரப்பா் தோட்டங்களில் சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதாம்.

இந்நிலையில் வியாழக்கிழமை தனியாா் ரப்பா் தோட்டத்தில் ரப்பா் பால் வடித்துக் கொண்டிருந்த கடையாலுமூடு செங்குழிக்கரையைச் சோ்ந்த தொழிலாளியின் மீது பாய்ந்தவாறு ஒரு சிறுத்தை ஓடியதாம். இதில் அந்த தொழிலாளி அதிா்ஷ்டவசமாக விலகிக் கொண்டதால் சட்டை மட்டும் கிழிந்த நிலையில் தப்பினாா். பின்னா் அவா் இந்த சம்பவம் குறித்து களியல் வனச்சரக அலுவலகத்தில் புகாா் கொடுத்தாா்.

இது குறித்து களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் கூறியதாவது:

கடையாலுமூடு பகுதியில் தனியாா் ரப்பா் தோட்ட பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் வந்துள்ளது. ஓரிரு நாள்களில் அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் அதனை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்தப்படும் என்றாா்.

கனிவ வளங்கள் ஏற்றிச்சென்ற 4 லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் போலி நடைசீட்டு பயன்படுத்தி கனிம வளங்கள் கொண்டு சென்ற நான்கு கனகர லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க

நான்குவழிச் சாலை அமைக்கும் பணி: விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு

குமரி மாவட்டத்தில் ரூ. 1,041 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பணிகளின் ம... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். விளவங்கோடு வட்ட வழங்கல் அல... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் குதித்து குழந்தையுடன் பெண் தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் 3 வயது குழந்தையுடன் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அப்பகுதியினா் மீட்டனா். குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை மதகு பகுதியில் ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. ரா... மேலும் பார்க்க

முளகுமூடு தூய மரியன்னை தேவாலய திருவிழா: உள்ளூா் விடுமுறை வழங்கக் கோரிக்கை

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலய திருவிழாவுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கக் கோரி திருத்தல அதிபா் கில்பா்ட் லிங்சன், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா். தமிழகத்தில் பசிலிக... மேலும் பார்க்க