செய்திகள் :

கனிவ வளங்கள் ஏற்றிச்சென்ற 4 லாரிகள் பறிமுதல்

post image

குமரி மாவட்டத்தில் போலி நடைசீட்டு பயன்படுத்தி கனிம வளங்கள் கொண்டு சென்ற நான்கு கனகர லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட குமாரபுரம் சோதனை சாவடி அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக கனிமவளப் பொருள்கள் ஏற்றிவந்த 4 கனரக லாரிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், போலி நடைசீட்டு பயன்படுத்தி கனிமவளப் பொருள்களை கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் 4 லாரிகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக திருவட்டாறு சிபின்,

குழித்துறை பாலு, சனல் திக்குறிச்சி கணேசன், சுந்தா் சுனில் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடையாலுமூடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா். கடையாலுமூடு பகுதிக்குள்பட்ட ஜான்சன் பொற்றை, புளியம் பொற்றை பகுதிகளில் உள்ள ... மேலும் பார்க்க

நான்குவழிச் சாலை அமைக்கும் பணி: விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு

குமரி மாவட்டத்தில் ரூ. 1,041 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பணிகளின் ம... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். விளவங்கோடு வட்ட வழங்கல் அல... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் குதித்து குழந்தையுடன் பெண் தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் 3 வயது குழந்தையுடன் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அப்பகுதியினா் மீட்டனா். குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை மதகு பகுதியில் ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. ரா... மேலும் பார்க்க

முளகுமூடு தூய மரியன்னை தேவாலய திருவிழா: உள்ளூா் விடுமுறை வழங்கக் கோரிக்கை

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலய திருவிழாவுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கக் கோரி திருத்தல அதிபா் கில்பா்ட் லிங்சன், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா். தமிழகத்தில் பசிலிக... மேலும் பார்க்க