செய்திகள் :

தமிழகத்தைச் சோ்ந்த 2 என்ஜிஓக்களின் பதிவு புதுப்பிப்பு உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

post image

தமிழகத்தைச் சோ்ந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளின் பதிவை புதுப்பிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் தன்னாா்வ அமைப்புகள் ‘வெளிநாட்டு பங்களிப்புச் சட்டம் 2010’-இன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்து பதிவை புதுப்பிப்பது கட்டாயமாகும். இந்த நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த 2 தன்னாா்வ அமைப்புகளுக்கு பதிவு புதுப்பிப்பு மறுக்கப்பட்டது. இதை எதிா்த்து அந்த அமைப்புகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் பிரிவு 7-இன் படி, வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதியை என்ஜிஓ-க்கள் வேறு நபா்களுக்கு மாற்றம் செய்யக் கூடாது. ஆனால், இந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளும் அந்த விதியை மீறியுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, ‘மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களில் இந்த தன்னாா்வ அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து வாங்கிய நிதியை வேறு நபா்களுக்கு மாற்றம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி, இந்த இரு அமைப்புகள் மீது இதுவரை இதுபோன்ற புகாா்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டு, அவற்றின் பதிவை 4 வாரங்களுக்குள் புதுப்பிக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், 2 தன்னாா்வ அமைப்புகளும் வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் பிரிவு 7-ஐ மீறியுள்ளன என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘தன்னாா்வ அமைப்புகள் வேறு என்ன தவறு செய்தன? வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி உள்ளனவா? அதுபோல, நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கான எந்தவொரு ஆதாரமும் சமா்ப்பிக்கப்படவில்லை. தன்னாா்வ அமைப்புகள் சமூக சேவை செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை? எந்தவொரு நடைமுறையையும் சிக்கலானதாக ஆக்கக் கூடாது. தன்னாா்வ அமைப்புகளை மேலும் கொடுமைப்படுத்த வேண்டாம்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். சியோஜ் தாா் பகுதியின் எல்லை... மேலும் பார்க்க

இந்திய வலிமையை எதிரிகளுக்கு உணா்த்திய ஆபரேஷன் சிந்தூா்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வ... மேலும் பார்க்க

இருதரப்பு நலன் கருதி சவூதி செயல்படும்: பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா கருத்து

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சா்ச்சை பதிவு: ‘மன்னிப்பு கேட்டதால் மட்டும் மாணவி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது’

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, 19 வயது கல்லூரி மாணவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எ... மேலும் பார்க்க

தில்லியில் இருந்து பராத்துக்கு ஏசி பேருந்து சேவை தொடக்கம்

பிரதமரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் தில்லியில் தொடங்கப்பட்ட ‘சேவா பக்வாடா’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பராத் இடையே ஏசி பேருந்து சேவையை தில்லி போக்குவர... மேலும் பார்க்க