செய்திகள் :

‘குமரி மாவட்டத்தில் கோ -ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 5 கோடி’

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு ரூ. 5 கோடிக்கு கோ - ஆப் டெக்ஸின் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா பேசினாா்.

கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி, துணிநூல் துறை சாா்பில் நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜா் வணிக வளாகத்தில் இயங்கி வரும் கோ - ஆப் டெக்ஸ் அங்காடியில் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா, எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கோ-ஆப் டெக்ஸ் தமிழ்நாட்டிற்குள்பட்ட கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை

கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளா்களுக்கு தொடா்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்.15 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு வழங்கும் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு விற்பனை நிலையங்களுக்கு ரூ.5 கோடிக்கு தீபாவளி விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரம் சிறக்க கைத்தறி துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி உதவி உறைவிட மருத்துவா் விஜயலெட்சுமி, அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஹேமா, மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி லதா, கோ- ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா. ராஜேஷ்குமாா், கைத்தறி, துணிநூல் துறை உதவி இயக்குநா் ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கனிவ வளங்கள் ஏற்றிச்சென்ற 4 லாரிகள் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் போலி நடைசீட்டு பயன்படுத்தி கனிம வளங்கள் கொண்டு சென்ற நான்கு கனகர லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க

கடையாலுமூடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா். கடையாலுமூடு பகுதிக்குள்பட்ட ஜான்சன் பொற்றை, புளியம் பொற்றை பகுதிகளில் உள்ள ... மேலும் பார்க்க

நான்குவழிச் சாலை அமைக்கும் பணி: விஜய்வசந்த் எம்.பி. ஆய்வு

குமரி மாவட்டத்தில் ரூ. 1,041 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பணிகளின் ம... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 980 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். விளவங்கோடு வட்ட வழங்கல் அல... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் குதித்து குழந்தையுடன் பெண் தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் 3 வயது குழந்தையுடன் குதித்து வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்ற பெண்ணை அப்பகுதியினா் மீட்டனா். குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை மதகு பகுதியில் ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. ரா... மேலும் பார்க்க